India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

காயம் காரணமாக ஆஸ்திரேலிய BBL டி20 தொடரில் இருந்து ரவி அஷ்வின் விலகியுள்ளார். சிட்னி தண்டர்ஸ் அணியில் விளையாட ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஷ்வின், தொடருக்கு தயாராகும் விதமாக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, முழங்காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

ஒவ்வொரு 40 நாள்களுக்கும், ஒரு போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பல், படையில் சேர்க்கப்படுவதாக கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். 2035-க்குள் 200-க்கும் மேற்பட்ட போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் சேர்ப்பதே இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய நிலவரப்படி, கடற்படையில் 142 போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, கண்டுபிடிப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம் என முன்னெப்போதும் இல்லாததை விட இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு வலுப்பெற்று வருவதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், ஹமாஸின் கொடூர தாக்குதலின் போது PM மோடி முதல் ஆளாக போன் செய்து ஆறுதல் கூறியதை என்றும் மறக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் – குழந்தைகள் இடையிலான உறவு சரியாக இல்லாததே, குழந்தைகளின் ஆளுமைத்திறன் குறைபாடு முதல் தற்கொலை எண்ணம் வரை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும், கல்வி அளிப்பதும் மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. அவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அவர்களுடன் நல்ல புரிதலை ஏற்படுத்தி, வழிகாட்ட வேண்டும். வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் இறந்த அனிதா கேரக்டர், இந்த பாகத்தில் இருக்கிறதா இல்லையா என்பது சஸ்பென்ஸ் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் கால்ஷீட் கொடுத்தால் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும்
‘புதுப்பேட்டை 2’ படங்களை எடுக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் வழியாக தினசரி இணையம் பயன்படுத்துவோர், அதிக சமூக தனிமைப் படுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் நேரம் செலவிடும் போது, சக மனிதர்களுடன் செலவிடும் நேரமும், அவர்களுடனான நெருக்கமும் குறைகிறது. ஆகவே, தேவைக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதீர். உறவுகளோடு உறவாடுங்கள். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

ஒரு Weak Password-ஆல், ஹாஸ்பிடலின் கர்ப்பிணிகளின் அந்தரங்க செக்கப் காட்சிகள் இணையத்தில் விற்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. குஜராத், ராஜ்கோட்டில் உள்ள தனியார் பிரசவ ஹாஸ்பிடலை ஹேக் செய்த கொடூரர்கள், கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ‘admin123’ என்ற Weak Password தான் ஹேக் செய்யப்பட முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுபோன்று 50,000 வீடியோக்களை அவர்கள் திருடி விற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.