India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குநராக இருக்கும் சுந்தர்.சி இயக்கத்தில் 2026-ல் 3 படங்கள் வெளிவரலாம் ✦ரஜினி- சுந்தர்.சி படம் 2026 தீபாவளிக்கு ரெடியாவதாக கூறப்படுகிறது ✦விஷால்- சுந்தர்.சி படம் 2026 சம்மரில் வெளியாகலாம் ✦நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் அடுத்த ஆண்டு வெளியாகலாம். இந்த படங்கள் திட்டமிட்டபடி வெளியானால், 2026-ல் சுந்தர்.சியின் 3 ட்ரீட் காத்திருக்கு!

ஜெ., இருக்கும்போதே சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வலம்வந்த மனோஜ் பாண்டியன், பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ஜெ., மறைவுக்கு பின் சசிகலா பொதுச் செயலாளராக வரவேண்டும் என போர்க்கொடி தூக்கியதில் இவரும் ஒருவர். பின்னர் OPS பக்கம் சாய்ந்தார். EPS-க்கு எதிரான இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் OPS தரப்பில் இவர்தான் ஆஜரானார். இந்நிலையில், மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

10, 12-வது வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் தேர்வுக்கு 3 மாதங்களே உள்ளன. ஆனால், எப்படி படிப்பது, எதை முதலில் படிப்பது, நேரத்தை எப்படி பயன்படுத்துவது போன்ற பல குழப்பங்கள் இருக்கலாம். இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க, ஈசியாக பாஸ் பண்ணிடலாம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து எல்லா டிப்ஸையும் பாருங்கள். அனைத்து மாணவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

மம்முட்டிக்கு கேரள அரசின் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய விருதில் அவருக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே தெரிகிறது, அது நடுநிலையுடன் வழங்கப்படுவதில்லை என்று விமர்சித்துள்ளார். இதை சொல்ல தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

வேலூர், திருப்பூர் மாவட்ட திமுகவில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகள் அடங்கிய வேலூர் தெற்கு மாவட்டத்திற்கு AP நந்தகுமார் செயலாளராகவும், காட்பாடி, KV குப்பம் தொகுதிகளை கொண்ட வேலூர் வடக்கு மாவட்ட செயலாளராக கதிர் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர்(கி) மா.செ.,-வாக பத்மநாபன், திருப்பூர்(மே) மாவட்ட செயலாளராக கே.ஈஸ்வரசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல், வாடிக்கையாளர்களுக்கு Jio, Airtel, VI
நெட்வொர்க்குகள் அதிர்ச்சி தரவுள்ளன. ஆம், ரீசார்ஜ் கட்டணங்களை 10- 12 % வரை இந்நிறுவனங்கள் உயர்த்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை, ₹199 ரீசார்ஜ் பிளான், இனி ₹222 ஆகவும், ₹899 ஆக ரீசார்ஜ் பிளான், இனி ₹1006 ஆக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது. நீங்க மாதம் எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்றீங்க?

T20 & ODI பார்மெட்களை எப்படி பேலன்ஸ் செய்வது என AB டிவில்லியர்ஸிடம் அறிவுரை கேட்டுள்ளார் இந்திய T20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். T20-ல் நன்றாக விளையாடினாலும், ODI-ல் தான் தடுமாறுவதாக குறிப்பிட்ட அவர், இப்பேட்டியை பார்த்தால் AB டிவில்லியர்ஸ் தன்னை உடனடியாக அணுகி அட்வைஸ் தர வேண்டும் என கூறினார். மேலும், இரு பார்மெட்டுக்கு மத்தியில் தன்னால், சமநிலையை பெறமுடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிட்னி திருட்டு வழக்கில் திருச்சி தனியார் சிதார் ஹாஸ்பிடலின் லைசன்ஸை அரசு ரத்து செய்திருந்தது. ஆனால், அந்த உத்தரவை இன்று ஐகோர்ட் மதுரைக் கிளை ரத்து செய்தது. இதை கண்டித்துள்ள EPS, அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சிக்காரரின் ஹாஸ்பிடலை தப்பிக்க வைக்க, மக்கள் நலனை ‘Failure மாடல் ஸ்டாலின் அரசு’ புறந்தள்ளியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கியுள்ளார். ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்ததாக, மகளிர் ஆணையத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான்தான் அப்பா என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, DNA பரிசோதனை தேவையில்லை என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ODI உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை PM மோடி நாளை(நவம்பர் 5) சந்திக்கவுள்ளார். இதற்காக, பிரதமர் அலுவகத்திலிருந்து BCCI-க்கு சிறப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீராங்கனைகள் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளனர். முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.