India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். 2019-ம் ஆண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் தொடங்கிய விசாரணை, பூதாகரமாகி நாட்டையே உலுக்கியது. 9 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியது, பின்னர் CBI விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் மே 13-ம் தேதி தீர்ப்பு வருகிறது.
காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை, வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், விடுமுறை வழங்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, நாகை & நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 289 புள்ளிகள் உயர்ந்து, 24,328 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் உயர்ந்து, 80,218 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. எண்ணெய் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் & பொதுத்துறை வங்கிகள் இன்று உயர்வு கண்டுள்ளன. உங்களின் லாபம் அதிகரித்திருக்கிறதா?
ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ₹9,290ஆகவும், 1 சவரன் ₹74,320 ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ₹285-ம், 1 சவரன் ₹2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹65-ம், சவரனுக்கு ₹520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ₹2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ₹9,290ஆகவும், 1 சவரன் ₹74,320 ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ₹285-ம், 1 சவரன் ₹2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹65-ம், சவரனுக்கு ₹520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ₹2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.
திடீரென தலைவலி, ஜுரம் வந்தா நீங்களே கூகிளில் பார்த்து மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரா? அல்லது அப்படியானவர் உங்களுக்கு தெரியுமா! அந்த பழக்கம் இருப்பவர்களுக்குதான், IDIOT syndrome இருக்கிறது. இது Internet Derived Information Obstructing Treatment (IDIOT) syndrome எனப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் இது அதிகரித்தும் வருகிறது. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், டாக்டரை அணுகுவதே சிறந்தது.
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று OPS தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் EPS & OPS நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் விசாரணை நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பாக C.V.சண்முகம் ஆஜராகியிருக்கிறார். மனுதாரர்கள் தரப்பில் O.P.ரவீந்திரநாத், K.C.பழனிசாமி ஆஜராகியிருக்கின்றனர்.
டெல்லி: ED தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதில், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் வழக்கின் விசாரணை பதிவுகள் அழிந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், வழக்கின் உண்மையான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் நகல் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில்தான் சோக்சி பெல்ஜியத்தில் கைது கைதானார்.
Sorry, no posts matched your criteria.