News November 4, 2025

BREAKING: நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம்

image

சென்னையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

News November 4, 2025

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

image

இன்று காலையில் திமுகவில் இணைந்த OPS ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். 2021-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார்.

News November 4, 2025

கனமழை வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<18195152>>கனமழைக்கான மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், திருவாரூர், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்க!

News November 4, 2025

முருகனை தரிசித்த ‘ஜனநாயகன்’ இயக்குநர்

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது எதிர்பார்ப்புகள் ஏராளம். இந்த படம் வரும் ஜன.9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் H.வினோத், இயக்குநர் ரா.சரவணனுடன் இணைந்து பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். என்ன வேண்டிக் கொண்டிருப்பார் H.வினோத்? கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News November 4, 2025

இந்தியாவின் லெஜண்ட் தொழிலதிபர் காலமானார்

image

இந்தியாவின் பழம்பெரும் கூட்டு தொழில் நிறுவனமான, இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா (85), வயது முதிர்வு காரணமாக காலமானார். மும்பையில் 1914-ல் தொடங்கப்பட்ட இக்குழுமம், இந்தியாவில் தொடங்கி பல்வேறு உலக நாடுகளில் விரிவடைந்துள்ளது. அசோக் லேலண்ட் வாகனங்கள் இந்த குழுமத்திற்கு சொந்தமானவை தான். பிரிட்டனில் வசித்து வந்த கோபிசந்த், 2023-ல் இக்குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

News November 4, 2025

சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

image

GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்து வருகின்றன. மாருதியை தொடர்ந்து ஹோண்டா, பண்டிகை சலுகைகளுடன் சூப்பர் ஆஃபர்களை அறிவித்துள்ளது. எந்த மாடல் காருக்கு, அதிகபட்ச ஆஃபர் என்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க எந்த கார் வாங்க ப்ளான் பண்ணுறீங்க?

News November 4, 2025

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறை

image

1,000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், USA-ல் செய்யாத கொலைக்காக, இந்திய வம்சாவளி சுப்ரமணியம் வேதம் 43 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். நிரபராதி என தீர்ப்பு வந்தாலும், அவரை நாடு கடத்த USA அதிகாரிகள் மீண்டும் சிறைபிடித்தனர். சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளரான சுப்ரமணியன் கோர்ட்டை நாட, நாடு கடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

News November 4, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் கைதா?… பரபரப்பு தகவல்

image

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குழந்தைக்கு அப்பா தான்தான் என்றும் <<18195589>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால், மாதம்பட்டி கைது செய்யப்படலாம்.

News November 4, 2025

கம்பெனிக்காக 17 ஆண்டுகள் உழைத்த நபர்.. கண்ணீர் பதிவு

image

17 ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஊழியர் ஒருவரின் X பதிவு வைரலாகி வருகிறது. நான் வேலையிழப்பு வேதனையில் இருந்தபோது குழந்தைகளை முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்த சிரிப்பு எனக்கு கண்ணீரை வரவழைத்தது. இதுவரை என்ன இழந்தேன் என இப்போது தெரிகிறது. நிறுவனங்கள் ஒருபோதும் தியாகத்தை மதிப்பதில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

News November 4, 2025

கோவை கொடூரத்தை தடுக்க தவறியது ஏன்? அன்புமணி

image

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி, இந்த கொடூரத்தை தடுக்க தமிழக அரசு தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். போதை பொருள்களின் நடமாட்டம் சிறிதளவு கூட குறையவில்லை என்று கூறிய அவர், அந்த அளவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளதாக விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்திற்காக, தமிழக ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!