News October 22, 2025

BREAKING: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை முதல் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவ.15(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

News October 22, 2025

சவுதி அரேபியாவில் வேலை செய்பவர்களுக்கு குட் நியூஸ்

image

சவுதியில் 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த ‘Kafala’ எனும் தொழிலாளர் நடைமுறையை அந்நாட்டு அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இனி புலம்பெயர் தொழிலாளர்கள், ஸ்பான்சர் (முதலாளிகள்) ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும், வேலைகளை மாற்றிக் கொள்ளவும் முடியும். நவீன அடிமைத்துவம் என வர்ணிக்கப்படும் ‘Kafala’ நடைமுறையில், முதலாளிகள் தங்களது தொழிலாளர்கள் மீது முழு ஆதிக்கம் செலுத்தினர்.

News October 22, 2025

கண்களை கவரும் கலர்புல் தெருக்கள்… வாவ் PHOTOS!

image

உலகளவில் மிகவும் வண்ணமயமான, கண்களை கவரும் 10 தெருக்களின் புகைப்படங்களை மேலே வழங்கியுள்ளோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. இதேபோல், நீங்கள் நேரில் பார்த்த கலர்புல் தெரு அல்லது இடங்களை கமெண்ட் பண்ணுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து, அவர்களையும் கமெண்ட் செய்ய சொல்லுங்க!

News October 22, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் பல மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. மேலும், இன்றிரவு 10 மணி வரை <<18075508>>சென்னை உள்பட 29 மாவட்டங்களில்<<>> மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மழைப்பொழிவை பொருத்து மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட உள்ளது.

News October 22, 2025

RJD vs காங்கிரஸ்: தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி

image

பிஹாரில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக RJD, காங்கிரஸ் இடையே இழுபறி நீடிப்பதால், கூட்டணிக்குள் பதற்றம் நிலவுகிறது. இதை சரிசெய்ய காங்., கட்சியின் முக்கிய தலைவர்கள் பிஹாரில் முகாமிட்டு, தேஜஸ்வி யாதவ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் காங்., EX CM அசோக் கெலாட், 5 – 10 தொகுதிகளில் நட்பு ரீதியான சண்டை நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

image

‘அம்மா நான் தப்பு பண்ணிட்டேன். SORRY. எனது சாவுக்கு சக்திவேல், முத்துராஜ், முருகேசன்தான் காரணம்’. தென்காசியில் தற்கொலை செய்த இளம்பெண்(26) எழுதிய வரிகள் இவை. சக்திவேலுக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை வைத்து பெண்ணிடம் பணம் பறித்த சக்திவேல், அவரது அந்தரங்க வீடியோவை லீக் செய்துள்ளார். இதனால், பெண் உயிரை மாய்த்துக் கொள்ள, நண்பர்கள் 2 பேருடன் சேர்த்து சக்திவேல் கம்பி எண்ணுகிறார்.

News October 22, 2025

GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

image

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு 6 வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ண இது தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. உங்களுக்கு இதில் எத்தனை விதமான ரெஸ்ட் தேவைப்படுது? கமெண்ட் பண்ணுங்க.

News October 22, 2025

ஆங்கிலத்தில் வெளியாகும் ‘காந்தாரா சாப்டர் 1’

image

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ஆங்கில பதிப்பு வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசல் பதிப்பில் இருந்து அரை மணி நேர காட்சிகளை குறைத்து, ஆங்கில பதிப்பு வெளியாக உள்ளது. அதன்படி, ஆங்கில பதிப்பின் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 14 நிமிடங்கள் 45 விநாடிகள் ஆகும். பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம், இதுவரை உலகளவில் ₹800 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

News October 22, 2025

அப்துல் கலாமின் குரு ’ஏக்நாத் சிட்னிஸ்’

image

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை (இஸ்ரோ) தோற்றுவித்தவர்களில் ஒருவரான விஞ்ஞானி ஏக்நாத் சிட்னிஸ் மறைவுக்கு(1925-2025) பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோவை உருவாக்க விக்ரம் சாராபாய் தேர்ந்தெடுத்த சிலரில் இவரும் ஒருவர். அப்போது இளம் விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாமுக்கு வழிகாட்டி, DRDO தலைவராக, பின் ஜனாதிபதியாக உயர இவரும் ஒரு காரணமாக இருந்தார். 1985-ல் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. RIP

News October 22, 2025

அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

image

திருச்சியில் வரும் 2026 பிப்ரவரி 7-ம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை’ நடத்த போவதாக சீமான் அறிவித்துள்ளார். நம் இனத்தின் திருவிழா என்பதால், அனைவரும் கூடுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ‘மரங்களின் மாநாடு’, ‘மலைகளின் மாநாடு’, ‘ஆடு மாடுகளின் மாநாடு’ ஆகியவற்றை நடத்தியுள்ள அவர், வரும் நவம்பர் 15-ம் தேதி ‘தண்ணீர் மாநாட்டையும்’ நடத்த உள்ளார்.

error: Content is protected !!