India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும், பல இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இரவிலும் மழை தொடரும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாய் இருங்கள் நண்பர்களே!

மக்களை பதற்றமாக வைத்திருக்கவே, SIR-ஐ பாஜக கொண்டு வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். போலி வாக்காளர்களை நீக்குவது சரி என்று கூறியுள்ள அவர், ECI கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயரே இருக்கும் என்றால், அது எப்படி சரி என கேள்வி எழுப்பியுள்ளார். SIR செயல்படுத்தப்பட்டால், விரைவில் தமிழ்நாடு இன்னொரு பிஹார் ஆகிவிடும் என்றும் விமர்சித்துள்ளார்.

மகளிர் உலகக்கோப்பை தொடர் முழுவதும், ICC ODI தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஃபைனலில் இந்தியாவிடம் தோற்ற SA அணி கேப்டன் லாரா வோல்வார்ட், அவரை தற்போது பின்னுக்கு தள்ளியுள்ளார். செமி ஃபைனல், ஃபைனல் என 2 போட்டிகளிலும் சதம் விளாசி அவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக டாப் 10-க்குள் (10-வது இடம்) இடம்பிடித்துள்ளார்.

மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் என அதிமுகவில் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். சொந்த ஊரில் மிகவும் செல்வாக்கு பெற்ற இவர்களின் வருகை திமுகவுக்கு பலம் சேர்க்கும் என்பது உண்மைதான். அதே நேரம், புதிதாக இணையும் மாற்றுக் கட்சியினருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், திமுகவினர் அதிருப்தி அடையவும் வாய்ப்புண்டு. உங்க கருத்து?

ஜூலை 15 முதல் தற்போது வரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வரவு வைக்கப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார். ஆனால், திட்டத்திற்கு தகுதியானவர்கள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகாததால் பலரும் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தகுதியானோர் விவரம் நவ.30-க்குள் தெரிவிக்கப்படும் என உதயநிதி மீண்டும் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பஞ்சபூத கோயில்கள் நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் என பிரபஞ்சத்தின் பஞ்ச மூலங்களை பிரதிபலிக்கின்றன. ஆன்மிக சக்தி நிறைந்த இந்த கோயில்கள், பக்தர்களுக்கு அற்புத அனுபவத்தை தரும். பஞ்ச பூத கோயில்கள் எவை, அமைந்துள்ள இடம் ஆகியவற்றை மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், எந்த கோயிலுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள்? எங்கு போக ஆசை? கமெண்ட்ல சொல்லுங்க.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதிலும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் குழந்தைகள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Outdoor activities அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வகுப்பறைகளில் Air Purifiers நிறுவப்பட்டுள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு தற்காலிகமாக மாறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வாய்ப்புள்ள, மாநில அளவிலான விநாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நாளை(நவ.5) கடைசி நாளாகும். ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6-9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விநாடி-வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்களை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வானத்தை பார்ப்பது எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் சிறப்பு நிகழ்வுகள் என்றால், குழந்தைபோல் பார்த்து மகிழ்வோம். இந்த நவம்பர், நம்மை மகிழ்விக்க பல வியப்பூட்டும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அவை என்னென்ன நிகழ்வுகள், எந்த நாள்களில் நடக்கின்றன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு எதை பார்க்க ஆசை? கமெண்ட்ல சொல்லுங்க.

இந்தியாவில் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 12 பேர், மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. 2019 முதல் 2023 வரை 3,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ‘Overdose’ காரணமாக நிகழ்ந்துள்ளன. Opiod வலி நிவாரணிகள், பதற்றத்தை குறைக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்று கூறும் நிபுணர்கள், போதைப்பொருள் அதிகரிப்பின் அச்சுறுத்தலை இது சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.