News April 28, 2025

பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொள்ளப்படுவார்கள்: ஷிண்டே

image

பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பதாகவும், அவர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும். பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News April 28, 2025

பம்பர் ஆஃபர்.. அரசு விரைவுப் பஸ்சில் இலவச பயணம்!

image

இந்த சம்மரில் அரசு விரைவுப் பஸ்சில் பயணித்தால், குலுக்கல் முறையில் 75 பேருக்கு இலவச பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறதாம். ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜுன் 15-ம் தேதி வரை பயணிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து இந்த பரிசு அளிக்கப்படும். முதல் பரிசாக, 25 பேர் ஓராண்டுக்கு 20 முறையும், 2-ம் பரிசாக 25 பேர் 10 முறையும், 3-ம் பரிசாக 25 பேர் 5 முறையும் பயணிக்கலாம். இப்பவே கிளம்புங்க!

News April 28, 2025

மகளிர் உரிமை: ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் விடுபட்டோருக்கும் விரைவில் இந்தத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து வந்தது. அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய CM ஸ்டாலின், ஜூனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார். இந்நிலையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஜூன் 4-இல் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

News April 28, 2025

பஹல்காம் தாக்குதல் செய்தி.. சர்ச்சையில் சிக்கிய பிபிசி

image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிபிசி வெளியிட்ட செய்திகள் சர்ச்சையானது. “காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கான விசாக்களை PAK நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இது இந்தியா மீது தவறு என்பது போல் உள்ளதாக பலர் விமர்சித்தனர். இதேபோல் தீவிரவாதிகள் என்பதற்கு பதில் போராளிகள் என்று குறிப்பிட்டதை கண்டித்தும் மத்திய அரசு பிபிசி-க்கு கடிதம் எழுதியுள்ளது.

News April 28, 2025

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி.. மீண்டும் விளக்கம்

image

காஷ்மீர் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த போது விஜய் ஆண்டனி தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது. அதில் பாக். மக்கள் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதனை தெளிவுபடுத்தும் விதத்தில் அவர் மீண்டும் X-ல் பதிவிட்டுள்ளார். அதில் பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே என்று குறிப்பிட்டுள்ளார்.

News April 28, 2025

ஆணவக் கொலை: ஆயுள் தண்டனை உறுதி

image

22 ஆண்டுகளுக்கு முன் கடலூரில் நடந்த முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. முருகேசனுடனான காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணகியின் குடும்பத்தார் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தனர். இதில் குற்றவாளிகளுக்கு ஐகோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை SC தள்ளுபடி செய்து ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

News April 28, 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து

image

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2026 -2010 வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.2.1 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஐ.பி.,யை திண்டுக்கல் நீதிமன்றம் விடுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அவரின் விடுதலையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இது அவருக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.

News April 28, 2025

விஜய் சங்கரின் மாஸ் ரெக்கார்டை உடைத்த கோலி!

image

நடப்பு ஆண்டில் விஜய் சங்கரின் ஒரே சாதனை DC-க்கு எதிராக 43 பந்துகளில் அரைசதம் அடித்தது தான். இதுதான் IPL 2025-ல் மிகவும் மெதுவான அரைசதமாக இருந்தது. மோசமான ரெக்கார்ட் என்றாலும், அவரால் இந்த சீசனில் ஒரே ஆறுதல் ரசிகர்களுக்கு இதுமட்டுமே. ஆனாலும், அதுவும் இருக்கக்கூடாது என கோலி முடிச்சி விட்டார். DC-க்கு எதிரான மேட்சில் அவர் 45 பந்துகளில் அரைசதம் அடித்து விஜய் சங்கரின் ரெக்கார்டை உடைத்து விட்டார்.

News April 28, 2025

போர் பதற்றம்… கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16241905>>பதற்றம் <<>>நீடித்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று மாலை கூடுகிறது. இதில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

News April 28, 2025

கேரளாவில் பதற்றம்… வெடிகுண்டு மிரட்டல்

image

கேரளாவில் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், போக்குவரத்துறை ஆணையர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். மே 2-ம் தேதி PM மோடி கேரளா செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!