India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ODI உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை PM மோடி நாளை(நவம்பர் 5) சந்திக்கவுள்ளார். இதற்காக, பிரதமர் அலுவகத்திலிருந்து BCCI-க்கு சிறப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீராங்கனைகள் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளனர். முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிலர் ஆர்வக்கோளாறில் பல வித்தியாசமான செயல்களை செய்வர். ஆனால் இங்கு ஒருவர் 100-க்கும் மேற்பட்டோரின் உயிரை பணயம் வைத்து ஒரு சம்பவத்தை செய்துள்ளார். வாரணாசியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஆகாசா ஏர் விமானம், ஓடுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சுஜித் சிங் என்ற பயணி, Emergency Exit-ஐ திறக்க முயன்றுள்ளார். விசாரித்ததில், ஆர்வம் காரணமாக திறந்ததாக விளக்கமளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

MGR ஆட்சிக் காலத்தில் 1985-89 வரை சபாநாயகராக இருந்த பி.ஹெச்.பாண்டியனின் மகன் தான், <<18194000>>மனோஜ் பாண்டியன்<<>>. பி.ஹெச்.பாண்டியன் தனது அரசியல் பலத்தால், 1993-ல் மனோஜ் பாண்டியனை அரசியலுக்கு கொண்டு வந்தார். அவரும் ஜெ.,வின் அன்பை பெற்று பல முக்கிய பொறுப்புகளை பெற்றார். 2001-ல் சேரன்மகாதேவியிலும், 2021-ல் ஆலங்குளத்திலும் போட்டியிட்டு MLA-வாக தேர்வானார். இதற்கிடையில், 2010-16 வரை ராஜ்யசபா MP-ஆகவும் இருந்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது: 20- 30 ★சம்பளம்: ₹48,480- ₹85,920 ★தேர்ச்சி முறை: Online Written Test, Local Language Proficiency Test & Personal Interview ★விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 23 ★முழு விவரங்களுக்கு <

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Ex அமைச்சர் பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் சாமிநாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திமுகவில் து.பொ., எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் கிழக்கில் அமைந்துள்ள Kamchatka பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த சேத விவரமும் பதிவாகவில்லை. இப்பகுதியில் உள்ள கண்டத் தட்டுகள் (Tectonic Plates) நகர்ந்து வருவதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில், சென்னை காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. பிறப்பு சான்றிதழில், த/பெயர் ரங்கராஜ் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Waiting List-ல் உள்ள டிக்கெட்டை Confirm செய்ய, IRCTC-ல் Vikalp என்ற அம்சம் உள்ளது. IRCTC-ல் டிக்கெட் புக் செய்த பிறகு, அது Waiting List-க்கு சென்றால், இந்த ஆப்ஷனை IRCTC காட்டும். ஆனால், Vikalp-ல் ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் அதே ரயிலில், அதே ஸ்டேஷனில் டிக்கெட் Confirm ஆகும் வாய்ப்பு குறைவு. அதே வழித்தடத்தில் செல்லும் ஏதாவது ஒரு ரயிலில் அருகாமை ஸ்டேஷனில் டிக்கெட் கிடைக்கலாம்.

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் நாளை பரவலாக கனமழை பெய்யும் எனவும் IMD கணித்துள்ளது. மேலும், நாளை மறுதினமும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.