India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுவாக எங்கு போனாலும், Free WiFi-யில் கனெக்ட் பண்ணும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால், அது ஆபத்தானது என மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கிறது. பாதுகாப்பற்ற இணைப்புகளின் மூலம் எளிதில் போனை ஹேக் செய்து, டேட்டா திருட்டு, நிதி இழப்பு போன்ற பிரச்னைகள் வரும் என CERT தெரிவிக்கிறது. அரசின் அங்கீகரிக்கப்பட்ட WiFi-கள் தவிர பிற WiFi-களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
T20-ல் மிடில் ஆர்டரில் யாரை களமிறக்குவது என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் என பலர் இருக்க, இதற்கு DC-யின் கோச் கெவின் பீட்டர்சன் ஒரு தீர்வை கொடுக்கிறார். கடந்த ஆண்டை விட கே.எல்.ராகுலின் ஆட்டம் மிக சிறப்பாக முன்னேறியிருப்பதாக குறிப்பிட்டு, அவரே கரெக்ட்டான சாய்ஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யார் கரெக்ட்டா இருப்பாங்க?
பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க, பஹல்காமின் காட்டு பகுதிகளில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. உளவுத்துறை அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து ராணுவம், பயங்கரவாதிகளை 5 நாட்களில் 4 முறை கண்டதாகவும், இதில் ஒருமுறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
ஒரு சில படங்கள எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காது. அப்படி, ஓப்பனிங்ல இருந்து எண்டு வர குலுங்கி குலுங்கி சிரிச்சிட்டே இருக்கிற மாதிரி படம்தான் ‘சுந்தரா டிராவல்ஸ்’. முரளி – வடிவேலு சேர்ந்து கலக்கி இருக்கிற இந்த படம் மறுபடியும் தியேட்டருக்கு வரப்போகுதாம். 2002-ல் ரிலீசான இந்த படத்த அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் பண்ணப் போறாங்க. மிஸ் பண்ணிடாதீங்க. இந்த படத்துல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு கமெண்ட் பண்ணுங்க!
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ நியூஸ், அக்தர் யூ-டியூப் உள்ளிட்ட யூ-டியூப் சேனல்கள், இந்தியா, இந்திய ராணுவம்- பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவலை பரப்பியதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை <<16241060>>CM ஸ்டாலின்<<>> வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது. 01.01.2025 தேதியில் இருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ₹10,000-ல் இருந்து ₹20,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
உலக சினிமாவின் ஜாம்பவான் மார்ட்டின் ஸ்கார்செஸி, ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படத்தில் Executive producer-ஆக இணைந்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் ‘ஹோம்பவுண்ட்’ படத்தில் அவர் இணைந்திருப்பது, படத்தை உலக ரசிகர்களுக்கு கொண்டு செல்லும். கரண் ஜோகர் தயாரித்துள்ள இப்படத்தில், ஜான்வி கபூர், இஷான் கட்டர் ஆகியோர் நடித்துள்ளனர். மசான் படத்தை இயக்கிய நீரஜ் கைவான் இயக்கி உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை 9 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் வீடுகளை ராணுவம் வெடிகுண்டு வைத்தும், பொக்லைன் வைத்தும் தகர்த்து வருகிறது. நேற்று தீவிரவாதிகள் அமீர் நஷிர், ஷாஃபி, ஜமீல் அகமது ஆகியோரின் வீடுகளை ராணுவம் இடித்து தள்ளியது. அதேபோல் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையும் நடக்கிறது.
திமுக ஆட்சி வந்தவுடன், போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராஜகண்ணப்பன், 2022-ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டு, பின் கூடுதலாக காதி துறையும் ஒதுக்கப்பட்டது. 2023-ல் பொன்முடிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, உயர்கல்வி துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 2024-ல் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் வனம், காதி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.