India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளன. தேமுதிக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க, 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமென இபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், எஞ்சிய 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை கூட்டணி ஏற்குமா?
இப்பவே வெயில் இப்படி இருக்கே, கத்திரி வெயில் தொடங்கினால் அவ்ளோதான். மே 4-ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திர காலம் மே 28 வரை நீடிக்கிறது. இதனால், மே 1 முதலே பல இடங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்ப அலை வீச வாய்ப்பில்லை என்றாலும், வறண்ட காற்று மற்றும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!
சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அது பாகிஸ்தானை பாலைவனமாக்கும் என அந்நாட்டு விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாயம் இல்லாமல் மக்கள் பட்டினியில் உயிரிழப்பர் எனவும், மொத்த நாட்டு மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என இந்தியா கூறிவருகிறது.
டீ, காபியில் கொஞ்சம் சர்க்கரை தூக்கலாக போட்டு குடிப்பீங்களா? அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய காரணம். இவை, இதயத்தை தான் கடுமையாக பாதிக்கும். புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவற்றையும் வரலாம். மேலும், சிந்திக்கும் திறனையும் இது பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் (83) காலமானார். பிரிட்டனைச் சேர்ந்த அவர், டிவின்ஸ் ஆப் ஈவில், SHOGUN, பைரேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் டிவின்ஸ் ஆப் ஈவில் படம், அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. supranuclear palsy எனும் ஒருவகை வாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
J & K பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ்) 15 பேர் உதவியதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Purdue பல்கலை. விஞ்ஞானிகள், தூய வெள்ளை நிற பெயிண்ட்டை உருவாக்கியுள்ளனர். இது 98.1% சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டது என்பதால், பருவநிலை மாற்றம், ஆற்றல் சேமிப்பிற்கான தீர்வாக கருதப்படுகிறது. இந்த பெயிண்ட்டை பூசுவதன் மூலம், மின்சாரம் இல்லாமலேயே, அறையின் வெப்பநிலையை 8°F-ஆக குறைக்கலாம். புவி வெப்பமயமாதலை தடுக்க இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Share it.
செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும், சைவம், வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
Sorry, no posts matched your criteria.