India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரத்தநாளங்கள் முதுமையடையும் ஆபத்து அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் ரிஸ்க் அதிகரிக்கிறது. 16 நாடுகளை சேர்ந்த 2390 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இயல்பான வயதைவிட ரத்தநாளங்கள் 5 ஆண்டுகள் முதுமையடைவது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு, ஆண்களை விட பெண்களிடமும் அதிகம் இருப்பது உறுதியாகியுள்ளது.
டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, அமைச்சர் தங்கம் தென்னரசு, MP கனிமொழி சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை முதல் 2 நாள்கள் நடைபெறவுள்ள GST கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பிலான முக்கிய கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளனர். இந்த GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல்லில் ஷ்ரேயஸ் 604 ரன்கள், ராகுல் 539 ரன்கள் குவித்த பிறகும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் இருவரும் இடம்பெறவில்லை. ரிசர்வ் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் து.ஜனாதிபதி தேர்தலில் பிராந்திய அரசியலை கையில் எடுத்துள்ளன அரசியல் கட்சிகள். து.ஜனாதிபதி வேட்பாளராக தமிழரான CPR-ஐ தேர்ந்தெடுத்து திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது பாஜக. இதனையடுத்து பாஜக பாணியில் தெலங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்து ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் செக் வைத்துள்ளது.
தீபாவளி பரிசாக ஜிஎஸ்டியை குறைக்கப் போவதாக PM மோடி அறிவித்திருக்கிறார். அதன்படி, 28%, 18% ஜிஎஸ்டி வரம்புகளில் இருக்கும் பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக, ₹40,000 மதிப்புள்ள மின்னணு பொருட்களின் விலை ₹4,000 வரை குறைய வாய்ப்புள்ளது. SHARE IT
வெயில், மழை என எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், உழைத்து வரும் போட்டோகிராபர்களை கொண்டாடும் விதமாக இன்று உலக போட்டோகிராபர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்த செய்தியானாலும், அது நமக்கு முதலில் கிடைப்பது போட்டோ வடிவில்தான். எப்போதும், போட்டோ எடுத்து திரைக்கு பின்னால் மட்டுமே நிற்பவர்களை, நேரில் வரவழைத்த CM ஸ்டாலின், அவர்களை போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அக்சர் படேல், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் யாரை மிஸ் பண்ணுறீங்க?
கோயில் காவலாளி அஜித் கொல்லப்பட்ட வழக்கில், அவரது தரப்பு வக்கீல் கார்த்திக் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்த அவர், வழக்கை நடத்தக் கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தும் நபர்கள் குறித்த விவரங்களை கார்த்திக் ராஜா தெரிவித்தால், மேலும் பல தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், கட்சி சார்பற்றவர். இவர் எந்த தேர்தலிலும் இதுவரை பங்கேற்றதில்லை. இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கார்கே, ஒரு சிறந்த மனிதரை, நன்கு சட்டம் அறிந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.