India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு ‘999’ என்ற புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுக்கு ₹999 செலுத்தினால் மட்டும் போதும். இதில், விபத்து மருத்துவ செலவுக்கு ₹3 லட்சம், எதிர்பாராமல் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ₹25 லட்சம், விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதற்கு <

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 5.30 வரை அதிகபட்சமாக புதுச்சேரி காலாப்பட்டில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 21 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 10 செ.மீ மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்பில்லை என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இது வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹300 குறைந்து ₹11,700-க்கும், சவரன் ₹93,600-க்கும் விற்பனையாகிறது. <<18068993>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 5% சரிந்திருந்த நிலையில், இந்திய சந்தையிலும் பெரிய அளவில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதி ஒரு பேய் என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ‘பைசன்’ பட கதாநாயகன் துருவ் விக்ரமிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மாரி செல்வராஜ் தான் கடந்து வந்த பாதைகளில் இருந்தே படத்தை இயக்குகிறார் என துருவ் தெரிவித்தார். இந்தியா போன்ற ஒரு சமூக கட்டமைப்பு உள்ள நாட்டில், குறிப்பாக தென் தமிழகத்தில் சினிமா உள்ளிட்ட கலை மூலம் சாதி பிரச்னையை வெளிப்படையாக பேசுவது முக்கியம் என்றும் கூறினார்.

செப்.27-ல் நிகழ்ந்த கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் வெளியில் தலைகாட்டவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஆன்லைன் மூலமே அனுப்பிவிட்டார். 16 நாள்கள் துக்கம், தீபாவளி விடுமுறை என 25 நாள்கள் கடந்துவிட்டன. தற்போது கனமழையும் பெய்ய தொடங்கிவிட்டது. இதனால் விஜய்யின் கரூர் பயணம் மட்டுமல்லாது, அவரது அரசியலுக்கும் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் வருவதாக தவெகவினர் புலம்புகின்றனர்.

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இது, வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புகள் குறைவு எனவும், அதேநேரம் நிலப்பகுதிக்கு அருகே உள்ளதால் கனமழை பெய்யும் எனவும் IMD தெரிவித்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழை பெய்துகொண்டே இருப்பதால், மலைப்பாதையில் அவர்கள் ஊர் திரும்புவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில், ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 10 வயது சிறுமி உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலால் சில இடங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Asia Cup டிராபியை எடுத்துச்சென்ற ACC தலைவர் மோசின் நக்வி உடனே அதை இந்திய அணியிடம் வழங்குமாறு <<18063977>>BCCI இ-மெயில்<<>> அனுப்பியது. இந்நிலையில் மோசின் நக்வி, BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நவ.10 அன்று துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் இந்திய வீரர்களும், கேப்டன் SKY-ம் பங்கேற்றால்தான், கோப்பையை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.