India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நம் உடலின் வளர்ச்சிக்கும், தசைகளின் வலிமைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், முக்கிய ஊட்டச்சத்தாக புரோட்டீன் உள்ளது. தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். அதிக செலவு இல்லாமல், குறைந்த விலையில் புரோட்டீனை எளிதாக பெறலாம். எந்த உணவில், எவ்வளவு புரோட்டீன் உள்ளது, என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், SIR மேற்கொள்ளப்படும் போது எந்த ஆவணமும் சமர்பிக்க வேண்டியது இல்லை என ECI விளக்கம் அளித்துள்ளது. இறுதி <<18120268>>வாக்காளர் பட்டியலில்<<>>, வாக்காளர் பெயர் விடுபடுவது உள்ளிட்ட ஏதேனும் பிரச்னை இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் முதல் முறையீட்டை செய்யலாம். கலெக்டர் அதை நிராகரித்தால், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் 2-வது முறையீட்டை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

உங்களால் இசையை சுவைக்கவோ, ஒரு நிறத்தை குறிப்பிட்ட ஓசையாக கேட்கவோ முடியுமா? உலகத்தில் உள்ள 5% மக்களுக்கு இந்த சூப்பர் பவர் இருக்கு. இதை சினஸ்தீசியா என்கின்றனர். சாதாரண மனிதர்களுக்கு ஒரு இசையை கேட்கும்போது கேட்கும் திறன் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இவர்களுக்கு அனைத்து திறன்களுமே தூண்டிவிடப்படுவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது. டெஸ்லா, மர்லின் மன்றோ போன்றவர்களுக்கு சினஸ்தீசியா இருந்ததாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பிரபலமான ஜம்தாரா 2 வெப் சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்த இளம் நடிகர் சச்சின் சாந்த்வாடே(25) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வசித்துவந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சாஃப்ட்வேர் என்ஜினியரான சச்சின், மராத்தி படங்களின் மூலம் திரையுலகில் அடியெடித்து வைத்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்.7-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * நவ.4-ம் தேதி முதல் டிச.4-ம் தேதி வரை வீடு வீடாக Enumeration Forms வழங்கப்படும். *டிச.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. *டிச.9 முதல் 2026 ஜன.8-ம் தேதி வரை வாக்காளர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். *இறுதிக்கட்ட சரிபார்ப்பு பணி டிச.9 முதல் 2026 ஜன.31 வரை நடைபெறும்.

*காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேட்மிண்டன் தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல். *ரஞ்சி கோப்பையில் 3-வது அதிக வேக இரட்டை சதத்தை பிரித்வி ஷா பதிவு செய்துள்ளார். *முதல் ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிப்பு. *ஆசிய யூத் கேம்ஸ், மகளிர் 3*3 கூடைப்பந்து காலிறுதியில் இந்தியா 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானிடம் தோல்வி.

ஆழ்கடல் உயிரினங்கள் முதல் காட்டுப் பூச்சிகள் வரை, சில உயிரினங்கள் இயற்கையாகவே இருட்டில் ஒளிர்கின்றன. இதனை பயோலுமினசென்ட் உயிரினங்கள் என்று அழைக்கின்றனர். இந்த ஒளிரும் அதிசயங்கள் மாயாஜால காட்சியாக தோன்றுகின்றன. என்னென்ன உயிரினங்கள் இரவில் ஒளிரும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட் பண்ணுங்க.

சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா – சீனா வர்த்தக மோதல் உள்ளிட்ட காரணிகளால், கடந்த வார இறுதியில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி, மும்பை குறியீட்டு எண் Sensex, 566.96 புள்ளிகள் உயர்ந்து 84,778 புள்ளிகளுடனும், தேசிய குறியீட்டு எண் Nifty50, 170.90 புள்ளிகள் உயர்ந்து 25.966- புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2-ம் கட்ட SIR மேற்கொள்ளப்படும் என ECI அறிவித்துள்ளது. அதனால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வது நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு Enumeration Form வழங்கப்படும். அதில் உள்ள விவரங்கள் 2003 வாக்காளர் பட்டியலோடு ஒத்துபோனால், மேலதிக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அழைத்து, விஜய் ஆறுதல் தெரிவித்ததற்கு பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கரூர் சென்றால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்திற்கு அழைத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்ற அச்சத்தில் விஜய் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.