India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்.7-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * நவ.4-ம் தேதி முதல் டிச.4-ம் தேதி வரை வீடு வீடாக Enumeration Forms வழங்கப்படும். *டிச.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. *டிச.9 முதல் 2026 ஜன.8-ம் தேதி வரை வாக்காளர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். *இறுதிக்கட்ட சரிபார்ப்பு பணி டிச.9 முதல் 2026 ஜன.31 வரை நடைபெறும்.

*காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேட்மிண்டன் தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல். *ரஞ்சி கோப்பையில் 3-வது அதிக வேக இரட்டை சதத்தை பிரித்வி ஷா பதிவு செய்துள்ளார். *முதல் ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிப்பு. *ஆசிய யூத் கேம்ஸ், மகளிர் 3*3 கூடைப்பந்து காலிறுதியில் இந்தியா 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானிடம் தோல்வி.

ஆழ்கடல் உயிரினங்கள் முதல் காட்டுப் பூச்சிகள் வரை, சில உயிரினங்கள் இயற்கையாகவே இருட்டில் ஒளிர்கின்றன. இதனை பயோலுமினசென்ட் உயிரினங்கள் என்று அழைக்கின்றனர். இந்த ஒளிரும் அதிசயங்கள் மாயாஜால காட்சியாக தோன்றுகின்றன. என்னென்ன உயிரினங்கள் இரவில் ஒளிரும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட் பண்ணுங்க.

சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா – சீனா வர்த்தக மோதல் உள்ளிட்ட காரணிகளால், கடந்த வார இறுதியில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி, மும்பை குறியீட்டு எண் Sensex, 566.96 புள்ளிகள் உயர்ந்து 84,778 புள்ளிகளுடனும், தேசிய குறியீட்டு எண் Nifty50, 170.90 புள்ளிகள் உயர்ந்து 25.966- புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2-ம் கட்ட SIR மேற்கொள்ளப்படும் என ECI அறிவித்துள்ளது. அதனால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வது நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு Enumeration Form வழங்கப்படும். அதில் உள்ள விவரங்கள் 2003 வாக்காளர் பட்டியலோடு ஒத்துபோனால், மேலதிக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அழைத்து, விஜய் ஆறுதல் தெரிவித்ததற்கு பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கரூர் சென்றால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்திற்கு அழைத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்ற அச்சத்தில் விஜய் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் மேற்கொள்ளப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 1951 முதல் 2004 வரை 8 முறை மட்டுமே SIR நடத்தப்பட்டதாகவும், கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002 – 2004-ல் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தேர்தலுக்கு முன்பு வாக்காளர் சரிபார்ப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிஹாரில் வெற்றிகரமாக SIR நடத்தப்பட்டதாகவும், 2-ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான, தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான அணியில் டெவால்ட் பிரெவிஸ், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சென், ரபாடா, கேஷவ் மஹராஜ், ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம் உள்ளிட்ட 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவ.14-ம் தேதி கொல்கத்தாவிலும், நவ.22-ம் தேதி கவுஹாத்தியிலும் நடைபெறவுள்ளது.

SIR தொடர்பாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடும் TN அரசு அதிகாரிகளை, திமுக அரசு சந்தேகிக்கிறதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். RK நகர் இடைத்தேர்தலின் போது போலி வாக்காளர் குறித்து திமுக வழக்கு தொடர்ந்தது மறந்து விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தவறுகளை மறைக்கவே, திமுக SIR-ஐ கையில் எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.