India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என கார்கே தெரிவித்துள்ளார். இது இந்தியா மீதான தாக்குதல், இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை, காங்கிரஸ் இதில் அரசியல் செய்யாது, தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து சக்தியையும் மோடி அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
₹10 லட்சத்திற்கு மேல் விலையுடைய ஆடம்பர பொருள் வாங்கும்போது இனி 1% டிசிஎஸ் (Tax collected at source) வரி விதிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரங்கள், காலணிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை வாங்கினால் கூடுதலாக வரி விதிக்கப்படும். இது ஏப்.22 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்பு வாங்கிய பொருள்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பதிலடி தாக்குதல் தொடர்பாக இன்று(ஏப். 24) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரத்தில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
முகூர்த்தம், வார இறுதி நாள்களை முன்னிட்டு, 1,170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 370, நாளை மறுநாள் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாளையும், நாளை மறுநாளும் தலா 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், மாதவரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 290 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை(ED) வழக்கில் அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்<<16191630>>பரபரப்பு கருத்து <<>>கூறியதோடு, அமைச்சர் பதவியா?, சுதந்திரமான ஜாமினா? என முடிவெடுக்க 4 நாள்கள் கெடு விதித்துள்ளது. இதனால், தனது உடல்நிலை மற்றும் கட்சிக்கு ஏற்படும் கலங்கத்தை தவிர்க்கும் வகையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
நம்மிடம் இருக்கும் சிறு சிறு பழக்கங்களே, வாழ்க்கையில் நமக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும் ✦வாழ்வில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள் ✦பொறாமைப்பட்டு ஒன்றையும் நீங்கள் சாதித்து விட போவதில்லை ✦கவனம் எப்போதும் செய்யும் வேலையிலேயே இருக்கட்டும். இப்போதே எதிர்காலத்தை குறித்து கவலைப்பட வேண்டாம் ✦சோம்பேறிக்கு சோம்பல் முறிப்பதும் கஷ்டமே *Over Confidence எப்போதும் வேண்டாம் Bro..
அதிக சிக்சர்கள் விளாசிய MI வீரர் என்ற பொல்லார்டின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். SRH உடனான நேற்றைய போட்டியில் அவர் 3 சிக்சர் விளாசினார். இதன்மூலம், மொத்தமாக MI அணிக்காக 260 சிக்சர் அடித்துள்ள அவர், பொல்லார்டின் (258) சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 12,000 ரன்களை கடந்தும் அசத்தியுள்ளார்.
ட்ரம்பின் அரசு நிர்வாகத்தில் இருந்து விலக எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். அமெரிக்க அரசு நிர்வாக செலவுகளை குறைக்கும் குழுவின் செயல் தலைவரான எலான் மஸ்க், ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில், அவரது டெஸ்டா நிறுவன பங்குகள் 20% வரை சரிவை சந்தித்தன. இதனால், டெஸ்டா வளர்ச்சிக்கு பங்காற்றும் நோக்கில் அரசு நிர்வாகத்தில் இருந்து அடுத்த மாதத்தில் விலக அவர் திட்டமிட்டுள்ளார்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் PM மோடியை கொல்ல வந்தவர்களாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கட்ரா – ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க 19-ம் தேதி அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால் பயணம் ரத்தானது. தீவிரவாதிகள் திட்டம் குறித்த உளவுத்துறை தகவலால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கொல்ல வந்தவர்கள், சுற்றுலா பயணிகளை கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியை கூட RCB அணி வெல்லவில்லை. இந்த சூழலில்தான் இன்று RR அணியை எதிர்கொள்கிறது. 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே RR வென்றுள்ளது. காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாடாததால் ரியான் பராக் அணியை வழிநடத்தவுள்ளார். அதேநேரத்தில், சொந்த மண்ணில் தொடரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க RCB மல்லுக்கட்டும். இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
Sorry, no posts matched your criteria.