India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கண்கள் மஞ்சளாக மாற 3 காரணங்கள் உள்ளன. 1) கல்லீரல் ரத்த சிவப்பணுக்களை உடைப்பதால், எந்தவொரு கல்லீரல் செயலிழப்பும் சிரோசிஸை ஏற்படுத்தும். இதனால் கண்கள் மஞ்சளாகும். 2) பித்த நாளங்கள் பித்தத்தை எடுத்துச் செல்ல முடியாதபோது, அது படிந்து, கண்கள் மஞ்சள் ஆகும். 3) பித்த நாளத்துடன் சேர்ந்து, கணையத்திலிருந்து வரும் குழாய் சிறுகுடலுக்கு வழிவகுக்கிறது. அது பாதிக்கப்பட்டாலும் கண்கள் மஞ்சளாகும்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரயில் பெட்டியில் ஓர் ஆணின் பிணம் கிடந்துள்ளது. அதன் அருகில்வந்த ஆண் பயணி ஒருவர், அதன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு துழாவியுள்ளார். பின் சட்டென, சடலத்துடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி தப்பிவிட்டார். பிணத்துடன் உறவில் ஈடுபடும் அளவுக்கு மனிதரின் மனம் மாசடைந்துவிட்டதன் காரணம் என்ன?
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு இல்லாவிட்டால், பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஏன் அமைதி காக்கிறார் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். பாக்., திடீரென ஹை-அலர்ட்டில் உள்ளது ஏன் எனக் கேள்வி எழுப்பும் அவர், தன் நாடு தீவிரவாதிகளை ஊக்குவித்து, அடைக்கலம் அளிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பாக்., அணியில் இருந்த ஒரே இந்து வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் எதிரொலியாக மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய IPL போட்டியில், SRH அணியை மிகக் குறைந்த ரன்களில் கண்ட்ரோல் செய்து அசத்தியிருக்கிறது MI. முதலில் பேட்டிங் செய்த SRH அணியின் முதல் நான்கு வீரர்கள் 0, 8, 1, 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கிளாசன் (71), அபினவ் (43) ஆகியோரின் அதிரடியால், அந்த அணி 20 ஓவர்களில் 143/8 ரன்கள் என்ற கௌரவமான நிலையை எட்டியது. MI அணியின் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் MLA-க்களை சமாதானப்படுத்த சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ் விருந்து வைத்து வருகிறார். இவ்விருந்தில் அதிமுக மூத்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அவரை தொடர்ந்து சூலூர் MLA கந்தசாமி, பவானிசாகர் MLA பண்ணாரி, திண்டிவனம் MLA அர்ஜுனனும் புறக்கணித்துள்ளனர். இது அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது.
ADMK MLA-க்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார். பாஜகவுடன் கூட்டணியமைத்திருப்பதால், தலைமை மீது MLAக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், செங்கோட்டையன் இந்த விருந்துக்கு வரவில்லை. இது, EPS vs செங்கோட்டையன் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
உங்களுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம்; அதனை நாங்கள் இப்போது ஒப்புக் கொள்கிறோம் என்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் பதவியில் தொடர்வதா (அ) ஜாமினா என்று முடிவெடுக்க, அவருக்கு 4 நாள்கள் கெடு விதித்துள்ளனர். ஜாமின் இல்லையெனில், சிறை செல்ல நேரிடும். என்ன முடிவெடுப்பார் செந்தில் பாலாஜி?
சுக்கிரன் ஏப்.13-ல் மீன ராசியில் நிவர்த்தி அடைந்ததால், 2 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் அதிக நன்மை பெறும் ராசிகள்: *ரிஷபம்- பொருளாதார நிலை உயரும், தடைகள் நீங்கும் *கடகம்: தொழில், வேலையில் முன்னேற்றம், குடும்ப சூழல் மேம்படும் *துலாம்: பாசிடிவ் மாற்றங்கள். குடும்ப உறவு சிறக்கும். பயண வாய்ப்பு *விருச்சிகம்: வருமானம் உயரும், குடும்பத்தில் மகிழ்ச்சி *தனுசு: அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுதாக கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.