India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஐஜேகே, NDA கூட்டணியில் தொடர்வதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உறுதி செய்தார். சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்தபட்சம் 5 தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறினார். குறிப்பாக லால்குடி, குன்னம், திருவாடனை, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னையில் ஒரு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக TVK கூட்டணியில் IJK இணைய உள்ளதாக பேசப்பட்டது.

2025 சீசனில் SRH அணிக்காக விளையாடிய இஷான் கிஷனுக்கு 2026 ஏலத்தில் மவுசு கூடி வருகிறது. 2025 தொடருக்கு முன்பாக, ₹11.25 கோடிக்கு SRH அணியால் வாங்கப்பட்ட இஷான் கிஷன், அந்த சீசனின் 2 சதங்களை விளாசினார். தற்போது அவரை அணியில் சேர்க்க KKR, MI, RR ஆகிய அணிகள் SRH அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரை விடுவிக்கும் முடிவை இன்னும் SRH எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் நன்றாக தூங்கினாலும், காலையில் சோர்வாகவே இருக்கீங்களா? இதனை சாதாரணமாக எடுக்க வேண்டாம். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மன அழுத்தம், தைராய்டு பிரச்னை, மதுபழக்கம், இரும்பு சத்து குறைபாடு, தூங்கும் மெத்தை சரியில்லாமல் இருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. இதை சரி செய்யவில்லை என்றால் நாளடைவில் இதய பிரச்னைகள் வரலாம். உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE.

ரயில் ரத்தாகி விட்டது, ரயிலில் சாப்பாடு, தண்ணீர் சுத்தமாக இல்லை என பல போலியான சர்ச்சை வீடியோக்களும், கருத்துக்களும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இனி இப்படியான போலி செய்திகளால் ஏமாற வேண்டாம். இந்திய ரயில்வே சார்பில் Fact Check தளம் தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான செய்திகள் பரவினால், அதனை @IRFactcheck என்ற பேஜில் டேக் செய்து, உண்மையை அறிந்து கொள்ளலாம். இதனை அனைவருக்கும் பகிரவும்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து கண் மதகில் 3 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளுடன் நேற்று அங்கு, ஸ்ரீபெரும்புதுார் MLA செல்வப்பெருந்தகை ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விட்டது ஏன் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு எனவும் கடிந்துகொண்டார்.

வருண முத்ரா உடலில் நீர் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வலது கையின் சிறு விரலை, உள்நோக்கி மடித்து, கட்டை விரலை அத்துடன் சேர்த்து பிடித்து, மற்ற 3 விரல்களை நீட்டிப் பிடிக்கவும். கைகளை மார்புக்கு முன் வைத்து, விரல்களை அழுத்திப் பிடிக்கவும். இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். இப்படி ஒரு 5 நிமிடம் செய்யுங்கள்.

சென்னையில் இன்று(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அம்மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். முன்னதாக தருமபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறையாகும்.

மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, தெ.ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு இப்போது இந்திய அணி போராடி வருகிறது. அதற்கு இன்று நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய கடைசி 3 போட்டிகளில் சொதப்பியது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு இந்தியா திரும்புமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.23) காலையில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.