India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அணுகுண்டை விட பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறது சீனா. மெக்னீசியம் ஹைட்ரைட் என்ற மூலப்பொருளை கொண்டு, அணுசக்தி இல்லாமல் உருவாக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, 2 நொடிகளுக்கு 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கி மிரள வைத்திருக்கிறது. சீனாவுக்கு எதிராக, அமெரிக்க வர்த்தகப் போரை தொடங்கியிருக்கும் நிலையில், இந்த வெடிகுண்டு சோதனை உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ₹500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது. அசல் நோட்டில் ‘RESERVE BANK OF INDIA’ என இருக்கும். கள்ள நோட்டில் உள்ள ‘RESERVE’ல் E என்ற எழுத்துக்கு பதில் A என இருக்கிறது. உஷாரா இருங்க மக்களே!
எம்.எஸ்.தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த மும்பையின் இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியவரை சந்தித்த அந்த தருணத்தை, என்னால் நம்பவே முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 4 போட்டிகளில் விளையாடிய விக்னேஷ் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
KKR அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், GT அணியின் ஓப்பனிங் வீரர்கள் தரமான செய்கையை செய்து வருகின்றனர். சாய் சுதர்ஷன் 50 (34), ஷுப்மன் கில் 50 (33) என இருவரும் நிலையாக விளையாடி அரைசதம் கடந்திருக்கின்றனர். 11 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில் GT அணி 104 ரன்களை குவித்திருக்கிறது. இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல், KKR அணியின் பவுலர்கள் திணறி வருகின்றனர்.
IPL-ல் முகமது சிராஜ் கம்பேக் கொடுத்ததில், கோச் நெஹ்ராவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என GT இயக்குநர் விக்ரம் தெரிவித்துள்ளார். சிராஜுக்குள் நெஹ்ரா தன்னம்பிக்கையை விதைத்தாகவும், இருவர் இடையிலும் கோச்- வீரர் என நல்ல கனெக்ஷன் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். CT தொடரில் அணியில் இடம்பெறாத சிராஜ், நடப்பு IPL சீசனில் 7 போட்டிகளில் 11 விக்கெட்களை கைப்பற்றி, 2 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
7 உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாறுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலிஜீயம் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. அப்பாேது இந்த முடிவை எடுத்தது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கௌடர், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கசோஜு சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.
விஜய் டிவியை கலர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹாட்ஸ்டாரை ஜியோ வாங்கிய நிலையில், கலர்ஸ் நிறுவனமும் ஜியோவுடன் இணைந்துள்ளது. விஜய் டிவியை வாங்கிய கையோடு சில முக்கிய நிகழ்ச்சிகளை நிறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சூப்பர் சிங்கர்’, ‘நீயா நானா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதோடு, தொகுப்பாளர்களும் மாற்றப்பட உள்ளனராம்.
தமிழ் புத்தாண்டில், 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கன்னி ராசியினருக்கு குடும்பம், பணியிட சூழ்நிலைகளில் சாதகமற்ற பலன்கள் கிடைக்கும். துலாம் ராசியினருக்கு கணவன்- மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். தனுசு ராசியினருக்கு பல மாற்றங்கள் ஏற்படும். மகர ராசியினருக்கு வீடு, நில பிரச்னைகள் உருவாகும். கும்ப ராசியினர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய கண்ணனுக்கு, இபிஎஸ் தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். மழையின் போது சிறுவன் துடிதுடித்து போராடிய நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கண்ணன் காப்பாற்றிய வீடியோ வைரலானது. பலரும் அவரை ரியல் ஹீரோ என பாராட்டினர்.
7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
Sorry, no posts matched your criteria.