India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இதேபோல், பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
PBKS அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது RCB அணி. டாஸ் வென்ற PBKS அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய RCB அணியின் வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது, RCB 4 ஓவர்களுக்கு 26-3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல உள்ளார். நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டவருடன் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுபான்ஷு மே மாதம் செல்ல உள்ளார்.
கிரிக்கெட் போட்டியின் இடையே நடுவர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பாமா கோப்பை போட்டியில் KRP XI CC மற்றும் Crescent CC அணிகள் மோதின. 11ஆவது ஓவரின்போது நடுவர் பிரசாத் மல்காஓங்கர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் நாளை முதல் குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடங்குகிறது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் மக்களுக்கு இனிப்பான செய்தியை தெற்கு ரயில்வே கொடுத்துள்ளது.
நடிகர் ஸ்ரீ, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் ஸ்ரீ-யின் தனி மனித உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நடிகர் ஸ்ரீ குறித்த நிலை தெரியாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
PBKS, RCB அணிகள் மோதும் இன்றைய IPL போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்று RCB அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களில் இருக்கும் அணிகள் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெல்லும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும்.
பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும், அண்மையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவை இதுதொடர்பாக பிரதமர் மோடி சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல மத்திய அமைச்சரவை மாற்றப்படுகையில் அண்ணாமலைக்கு இடமளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாளையே இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
விஜய் டிவியில் கலக்கி வரும் பாலா தற்போது தமிழ் திரையுலகில் கலக்கப்போகிறார். தொகுப்பாளராக செயல்பட்டு வரும் பாலா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இப்போது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரீஃப்பின் புதிய படத்தில் அவர் நாயகனாக களமிறங்குகிறார். படத்தின் போஸ்டரை ராகவா லாரன்ஸ் X -தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நம்மில் பலரும் BED-ல் ஈர டவலைப் போட்டுவிட்டு கண்டுக்காமல் சென்று விடுகிறோம். ஆனால் இதனால் கிருமி உண்டாகி, BED-லிலும், படுக்கை விரிப்பிலும் வேகமாக பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லை, நமது உடலிற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர். வெளியில் இருந்து வந்து கால்களை சுத்தம் செய்யாமல் படுக்கைக்கு செல்வதும் உடல்நலனை பாதிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.