India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நேருக்கு நேர் வந்து மோதுங்கள் என PAK ராணுவ தளபதி அசிம் முனீருக்கு, PAK தலிபான் அமைப்பான TTP-யின் தளபதி காஸிம், பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவில், வீரர்களை பலியிடுவதற்கு பதில், உயர் அதிகாரிகள் போர்க்களத்திற்கு வாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார். TTP தளபதி காஸிமை பிடித்து தந்தால் ₹10 கோடி சன்மானம் என்று PAK அதிகாரிகள் அறிவித்த நிலையில், இந்த மிரட்டல் வீடியோ வெளியாகி உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 5 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என HM – களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காடுகள், பூமியின் நுரையீரல். அவை அழியும் போது, மனித வாழ்வின் சுவாசமும் நின்று போகிறது. இந்த காடுகளை அதிகரிப்பதில், UN அறிக்கையின்படி உலகளவில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. உலக வன பரப்பு தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி, தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது. 2025-ல் இந்தியாவின் வனப்பரப்பு 72.7 மில்லியன் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் சுமார் 2% ஆகும்.

கோவையில் நடந்த ‘டியூட்’ பட நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று ரசிகர்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி இளைஞர்கள் படையெடுத்ததால், தடுப்புகள் சரிந்து விழுந்தது. இதில், சிலர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தை CM ஸ்டாலின் விளம்பரங்களுக்கு வீணடித்து கொண்டிருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என ₹78,000 கோடி செலவிட்டுள்ளதாக அரசு கூறுகிறது; ஆனால் பல கிராமங்களில் இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதாகவும் சாடியுள்ளார்.

‘லோகா’வை தொடர்ந்து Vampire கதைக்களத்துடன் வெளிவந்துள்ள ‘தம்மா’ திரைப்படமும் நல்ல வசூலை குவித்து வருகிறது. பேய், சாமி, சூப்பர்ஹீரோவை தொடர்ந்து இந்திய சினிமா இப்போது Vampire கதைக்களத்திற்குள் புகுந்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு தான் இது புதுசு. ஆங்கிலத்தில் பல படங்கள், வெப் சீரிஸ்கள் Vampire-ஐ மையமாக கொண்டு வெளியாகியுள்ளன. அப்படி மிகவும் பிரபலமான படங்கள், சீரிஸ்கள் பற்றி அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க.

தமிழக அமைச்சரவை கூட்ட முடிவின்படி, தூய்மைப்பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காலை, மதியம், இரவு என 3 வேளை தூய்மைப்பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 29,000 பேருக்கு தினசரி உணவு வழங்க ₹186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின், அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஆசியான் மாநாட்டில் பங்கேற்கும் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே, PM மோடி மாநாட்டிற்கு செல்லவில்லை என்று காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். காஸா உச்சி மாநாட்டையும் டிரம்ப் வருகையாலே மோடி தவிர்த்ததாக குற்றம்சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், உலக தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து, தன்னை விஸ்வகுருவாக பிரகடனப்படுத்தும் வாய்ப்பை மோடி தவற விட்டுள்ளதாக கிண்டலடித்துள்ளார்.

சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி என்பது அரிதான ஒன்று. அந்த பட்டியலில் இணைந்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘டியூட்’ திரைப்படம், உலக அளவில் ₹100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ திரைப்படங்கள் ₹100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ‘டியூட்’ திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தீபாவளி காரணமாகவே PM மோடி ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மோடியின் முடிவை மதிப்பதாக கூறிய அவர், PM மோடி காணொலி மூலம் கலந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காணொலி மூலம் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ள PM மோடி, ஆசியான் – இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளதாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.