India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்து அறநிலையத்துறையை இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்ற சட்டம் இருக்கும்போது வக்ஃப் வாரியத்துக்கு மட்டும் ஏன் புதிய நடைமுறை என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வக்ஃப் சொத்துகள் எவை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வது நியாயமானதா என்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. வக்ஃப் வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் பரபரப்பு உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. வக்ஃப் வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருக்கலாம் என்றும் மற்றவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், விரிவான பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் இரவு 7 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவாரூர், நீலகிரி & தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் & ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கேரள மாநில அதிமுக செயலாளர் ஜி. சோபகுமார் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜி. சோபகுமார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (SBI ) அடிப்படை 25 புள்ளிகள் குறைப்பதாக அறிவித்து இருந்தது. இதனால் அந்த வங்கியில் வீடு, வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியோர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடனுக்கான வட்டியை அடிப்படை 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
CSK கேப்டன் தோனியை முன்னாள் CSK வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். தோனி ஒரு பாகுபலி எனக் குறிப்பிட்ட அவர், லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவர் சரியான இடத்தில் பேட்டிங் செய்து அசத்தலாக விளையாடியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். CSK-க்கு தோனி கேப்டனாக வந்ததும் அனைத்தும் மாறிவிட்டது என்றும், தோனி இருக்கும்போது அனைத்தும் சாத்தியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
<<16117348>>சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக B.R.கவாய் பதவியேற்கவுள்ளார்<<>>. 1960ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் பிறந்த இவர், பம்பாய் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பின்னர், 2019ஆம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவரது குடும்பத்தினர் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள்.
AI, டேட்டா சயின்ஸ் துறை ஆண்டுக்கு 55% வளர்ச்சியடையும் சூழலில், B.tech Artificial Intelligence & Data Science படிப்புக்கே அதிக டிமாண்ட். 4 வருட கோர்ஸில், Artificial neural networks, Data analytics ஆகியவை கற்பிக்கப்படும். JEE தேர்வுகளின் மூலம் இந்த கோர்ஸில் சேரலாம். பிரஷருக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ₹4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புவோர், இதுதான் பெஸ்ட்.
Sorry, no posts matched your criteria.