India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால், நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் (வாடிக்கையாளர்) முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.

தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா என்றும் சாடிய அவர், முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.

*வரும் 31-ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் ‘இட்லி கடை’ வெளியாக உள்ளது. *அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே ₹5 கோடி சம்பளம் பேசியுள்ளாராம். *‘பராசக்தி’ படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். *ஒயின் குடிக்காமல் ஸ்ரீதேவியால் தூங்க முடியாது குட்டி பத்மினி கூறியுள்ளார்.

தற்போது மழைக்காலம் என்பதால் பொடுகு தொல்லையை பற்றி கூறவேண்டிய அவசியமே இல்லை. இதனால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். கவலை வேண்டாம். இதனை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. SHARE.

PM கிசான் உதவித்தொகையின் 21-வது தவணையான ₹2,000, தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பணம் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அடுத்த வாரம் (அ) நவம்பர் முதல் வாரத்தில் பணம் கிரெடிட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கின் KYC-யை அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லையே என சொல்பவரா நீங்கள்? இந்த பழக்கம் எல்லாம் உங்ககிட்ட இருக்குதா பாருங்க ★தேவையில்லாத OTT subscription ★கொஞ்ச தூரத்திற்கும் Cab போடுவது ★டெய்லி வெளியில் சாப்பிடுவது ★புகை, மது பழக்கங்கள் ★அடிக்கடி கிரெடிட் கார்டு பயன்படுத்துவது ★அதிக செல்போன் ரீசார்ஜ். இவைதான் அதிகளவில் சைலண்டாக செலவு செய்ய வைக்கின்றன. இந்த பழக்கங்கள் இருந்தா உடனே மாத்திக்கோங்க! SHARE IT.

சைவம், வைணவம் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் பொன்முடி வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பொன்முடி சர்ச்சையாக பேசியதாக, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருவாய் கிராமத்தில் பட்டாதாரர் ஒருவர் இறந்திருந்தால், அவர் பெயர் நீக்கப்பட்டு அவரது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கும் நடைமுறை இருந்தது. இது பவுத்தி பட்டா மாறுதல் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களாலும், வேலைப்பளுவாலும் மாற்றப்பட்டு முழுவதும் ஆன்லைன் வசம் சென்றது. பவுத்தி பட்டா நடைமுறையை மீண்டும் செயல்படுத்த கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் இனி பொதுமக்களின் வேலை எளிமையாகும்.

தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, மழையால் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை, முகூர்த்தம், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, ஸ்பெஷல் பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.24, 25-ல் பல்வேறு ஊர்களுக்கும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்.26-ம் தேதி திருச்செந்தூருக்கும் ஸ்பெஷல் பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யூடியூப்பில் பலரும் நேரம் போவது தெரியாமலே ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை கட்டுப்படுத்த யூடியூப் நிறுவனமே புது கட்டுப்பாடு ஒன்றை விதிக்கவுள்ளது. இனி யூஸர்கள் தாங்களே ‘daily Scrolling limit’ என்பதை செட் செய்யலாம். இதில் நாம் தேர்வு செய்யும் அளவில் மட்டுமே ரீல்ஸ் பார்க்க முடியும். குறிப்பிட்ட நேரத்தை நெருங்கினால், உங்களுக்கு யூடியூப்பில் இருந்து Notification-ம் அனுப்பப்படும்.
Sorry, no posts matched your criteria.