India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் மகத்தான வெற்றிபெறும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிதாக வந்தவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. முதலில் அவர்கள் களத்தில் இறங்கி மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மறுபுறம் அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, 2026-ல் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றார்.

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்வதை தடை செய்ய (அ) கட்டுப்பாடுகளை விதிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆலோசித்து வருகிறது. கடந்த 19-ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் கொண்டு சென்ற பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பவர் பேங் கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் DGCA விளக்கமும் அளித்துள்ளது.

பொழுதுபோக்கு முதல் பொருள்கள் வாங்குவது வரை போன் தேவையாக உள்ளது. ஆனால், நீண்டநேரம் போன், கணினி பயன்படுத்துவதால் ‘TEXT NECK SYNDROME’ என்ற பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், குழந்தைகள், இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கழுத்து எலும்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, தசைகளும் பாதிக்கப்படுகிறது. மேலும் தலைவலி, தோள்பட்டை- கழுத்துவலி, நரம்பு பாதிப்பும் ஏற்படும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொறுத்துதான் விடுமுறையா, இல்லையா என்பது தெரியவரும்.

சூரி தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை X-ல் பகிர்ந்திருந்தார். அதில், திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு, திண்ணையில் இல்லை நண்பா, பல நாள்களாக ரோட்டில் இருந்தவன் நான். அந்த பாதை தான் வாழ்க்கையின் உண்மையும், மதிப்பையும் கற்று தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்தால் வெற்றி பெறலாம் என சூரி பதிலளித்துள்ளார்.

கோடிக்கணக்கான மக்களின் பார்வையை பெறும் பதிவுக்கு, பிரபலங்கள் கோடியில் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடைய ஒவ்வொரு பதிவும், உலகளாவிய விளம்பரமாக உள்ளது. எந்த பிரபலம், எவ்வளவு பெறுகிறார், என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் யாரை பாலோ செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால், நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் (வாடிக்கையாளர்) முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.

தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா என்றும் சாடிய அவர், முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.

*வரும் 31-ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் ‘இட்லி கடை’ வெளியாக உள்ளது. *அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே ₹5 கோடி சம்பளம் பேசியுள்ளாராம். *‘பராசக்தி’ படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். *ஒயின் குடிக்காமல் ஸ்ரீதேவியால் தூங்க முடியாது குட்டி பத்மினி கூறியுள்ளார்.

தற்போது மழைக்காலம் என்பதால் பொடுகு தொல்லையை பற்றி கூறவேண்டிய அவசியமே இல்லை. இதனால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். கவலை வேண்டாம். இதனை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. SHARE.
Sorry, no posts matched your criteria.