India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

₹79,000 கோடி மதிப்பில் ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும், இதில் உள்நாட்டு தயாரிப்புகளும் அடங்கும். இது இந்திய நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலத்தில் குடும்ப உறவுகள் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சண்டை போட்ட 30 நிமிடங்களுக்குள் சமாதானமாகும் தம்பதிகள், ஒன்றாக இருக்கும் வாய்ப்பு 80% அதிகம் இருக்கிறதாம். எனினும் இது சண்டையை தவிர்ப்பது அல்லது, அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஒரு சிரிப்பு, மென்மையான வார்த்தை அல்லது கட்டிப்பிடித்தல் கூட உறவை காப்பாற்றும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி, மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த பெண்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ₹1,000 வழங்கப்படும் என்றார். மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களால் நிரம்பியது. இங்கு நம்ப முடியாத விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் உண்மைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையும் ஒரு புதிய பார்வையைத் தருகிறது. இதில், சிலவற்றை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவலை கமெண்ட்ல சொல்லுங்க.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை, இந்த வாரம் சற்று தணிந்து ₹5,600 சரிவைக் கண்டுள்ளது. இது மேலும் சரியக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு, மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கிக் குவிப்பது, சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறையாதது போன்ற காரணங்களால், நாளை தங்கம் விலை சற்று அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கணிக்கின்றனர்.

வரும் நவ.23-ம் தேதியுடன் CJI BR கவாய் 65 வயதை எட்டுவதால், ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அடுத்த CJI-க்கான தேடலில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியானவரை பரிந்துரைக்க கோரி BR கவாயிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய CJI-க்கான ரேஸில் மூத்த நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் உள்ளார். அவரே நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகம் வேகமாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், சில தொழில்துறைகள் வளர்ச்சி அடைந்து, உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நமது வாழ்கை முறையையும் மாற்றி அமைக்கும். அவை என்னென்ன தொழில்துறைகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. வேறு ஏதேனும் தொழில்துறை உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் (எ) சபேசன் இன்று காலமானார். இந்நிலையில், அவரது நிறைவேறாத ஆசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த காலத்து கே.வி.மகாதேவன் முதல் அனைத்து மூத்த இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளதாக சபேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதை பலரும் பகிர்கின்றனர். RIP
Sorry, no posts matched your criteria.