India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் DCM வேட்பாளராக VIP கட்சி தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இவரது கட்சி போட்டியிடுகிறது. இவர் சார்ந்த நிஷாத் சமூகம் பிஹார் மக்கள் தொகையில் வெறும் 2.5% ஆகும். ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் இந்த சமுதாய மக்கள் பரவி வாழ்வதால், பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும் முக்கிய சமூகமாக உள்ளது.

சில விஷயங்கள் நம் வாழ்வை எளிதாக மாற்றி, இந்நாள் வரை பயனளித்து வருகின்றன. ஆனால், டெக்னாலஜி வளர்ச்சியடைய இவை, கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இவை முற்றிலுமாக அழிந்து விடும் என்றே கூறப்படுகிறது. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். வேறு என்ன டெக்னாலஜிலாம் காலப்போக்கில் மறைந்து விடும் என நினைக்கிறீங்க?

கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் தொடக்க பள்ளியின் கட்டடம் விரிசல்களுடன் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. விரிசல்களுடன் இருக்கும் பள்ளி கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், நோய் தொற்று பரவாமல் இருக்க, பள்ளிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை (வாரிசுதாரர்கள்) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். *அந்த 4 பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம் *டெபாசிட்ஸ், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

EPS கூறியது போல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பாக <<18072011>>EPS<<>> பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், லோடு மேன் ஒருவர் கூறிய தகவலை வைத்து நாளொன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, டீ குடிப்பதை நிறுத்தினால், ஆழ்ந்த உறக்கம் கிடைக்குமாம். அதுமட்டுமல்ல, பதற்றம், Dehydration பிரச்னைகள் குறையும். செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும், செரிமான பிரச்னை உள்ளிட்டவைகள் சரியாகுமாம். எனவே, நாளை காலையில் இருந்தே இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

மக்களே, உங்களுக்கோ/உங்கள் வீட்டிலோ 3 வயதுக்கு கீழ் குழந்தைகள் இருக்காங்களா? இவர்கள் கதவை திறந்து மூடும்போது கண்டிப்பாக கை விரல்களை நசுக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால், கைகள் வீங்குவதோடு, சில நேரங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம். உங்கள் பிஞ்சு குழந்தையின் பிஞ்சு விரல்களை காக்க ஆன்லைனில் கிடைக்கும் Door guard/ Door stopper-ஐ பயன்படுத்தலாம். அனைவருக்கும் யூஸ் ஆகும். SHARE THIS.

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு <<18021492>>டிச.15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை<<>> வழங்கப்படும் என DCM உதயநிதி அண்மையில் அறிவித்துள்ளார். இதுவரை, 28 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களது மனுக்கள் மீதான களஆய்வு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மேலும், நவ.15 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. அனைத்து பணிகளும் நவ.30-க்குள் முடிந்து டிசம்பரில் புதிய பயனர்களுக்கு பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை இறுதி செய்யுமாறு, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR நடத்துவதற்கான தேதி, அடுத்த ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2026-ல் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக compose செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என்று விஜய்யை கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விரைவில் பாடல் ரெடியாகும் என நினைக்கிறேன். பனையூர் கேட்-ன் பூட்டு வெளியே போட்டுருக்கா, உள்ளே போட்டுருக்கா என பத்திரிகையாளர்கள் தான் பார்க்கணும்; விஜய் மக்களுக்கான தலைவரா என்று அவரை பின் தொடரும் ரசிகர்களும், தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.