India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மை முதலில் வாட்டி வதைப்பது சளிதான். இதை தடுக்க சில பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி அண்டவே அண்டாது. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்டவை சளி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேபோல் மழைகாலத்தில் நாம் தவிர்க்கும் ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்டவையும் சளி பிடிக்காமல் தடுக்க உதவுமாம்.

கரூரில் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் நாட்களில் தீவிரப்படுத்த உள்ளனர்.

*பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள். *தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரை வேலை செய்வீர்கள். *நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவான நபர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள். *ஒருபோதும் ஒற்றை வருமானத்தை சார்ந்திருக்காதீர்கள். இரண்டாவது மூலத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்.

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், கடந்த ஜூன் மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை HC இருவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில படங்கள் நம் மனதில் தங்கி, இந்த உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றுகின்றன. இவை யதார்த்தங்கள் மற்றும் ஞானத்தை பிரதிபலிக்கின்றன. ஒருசில விஷயங்களை, வித்தியாசமாகப் பார்ப்பதன் மூலம் தெளிவு கிடைக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. சிந்திக்க தூண்டும் சில போட்டோக்களை, மேலோ பகிர்ந்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா நண்பர்களுக்கு share பண்ணுங்க.

*தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேரின் மனு தள்ளுபடி *இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மணீஷ் சர்மா நியமனம் *காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் அக்.29 செயற்கை மழை பொழிய வைக்க திட்டம் *கல்வியின் மூலம் கேரளா வளர்ச்சியடைவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு *டெல்லியை தொடர்ந்து ஹரியானா பஞ்சாப்பில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தகவல்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்

தீபாவளியையொட்டி ₹790 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக அரசு மது விற்பனைக்கே முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பண்டிகை சமயங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மையில் அரசு மது விற்பனை குறைக்கவே முயற்சி எடுப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

பிஹாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து வளர்ச்சி பணிகளில் புதிய உத்வேகம் பிறந்ததாக, தேர்தல் பரப்புரையில் PM மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் மோசமான ஆட்சி குறித்து இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பேசுவார்கள் என்றும், பாஜகவினர் இளைஞர்களிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிஹார் தேர்தலில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.