India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். *இஞ்சி சாறு இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சக்கரை அளவையை கட்டுபடுத்தும். *தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். *கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இஞ்சி சாறு உதவும். *இஞ்சி சாறு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

கரூர் சம்பவத்துக்கு பின் வீட்டிலேயே முடங்கியுள்ள விஜய் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு, பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டுள்ளார் . மாலை 3 – 5 மணிக்குள் பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டுமானத்துக்கு தடை விதிக்க மறுத்த HC, பக்தர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் கட்டங்களை பயன்படுத்த உத்தரவிட்டது. மேலும் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என TN முழுவதும் உள்ள கோயில்களுக்கும் அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது.

திரையுலகில் நடிப்பால் மக்களின் மனதை கவரும் நடிகைகள், இன்ஸ்டாவில் தங்களது போட்டோஷூட், ஃபேஷன் லுக்குகள், உடற்பயிற்சி வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து இன்னும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளனர். எந்த தென்னிந்திய நடிகை, எவ்வளவு பாலோயர்ஸ் வைத்துள்ளார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. யாருக்கு அதிக பாலோயர்ஸ்? கமெண்ட்ல சொல்லுங்க.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க கட்சி தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து, அமைதி காத்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றே கூறியதாகவும் அவர் புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

ஆரஞ்ச் நிறத்தின் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் செல்போன்கள் பிங்க் நிறத்தில் மாறுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோஸை பகிர்ந்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனிடையே ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ள திரவங்களை கொண்டு ஐபோன்களை துடைக்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உங்க ஐபோன் கலர் மாறுச்சா?

*வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ் *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரை கைப்பற்றிய வங்கதேசம் *சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மெக் லானிங் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா *தெற்காசிய தடகள போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம்

2015-ல் கல்குவாரி உரிமை தொடர்பாக அப்போதைய குன்னம் தொகுதி MLA-வும், இப்போதைய அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலவரம் ஏற்பட்டு காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிவசங்கர் உள்பட 31 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, சிவசங்கர உட்பட 27 பேரை(4 பேர் இறந்துவிட்டனர்) சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டனர்.

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விக்கெட் எடுக்கும் திறமை குல்தீப்புக்கு உண்டு. எனினும் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குல்தீப் அணியில் இருந்தாலும், XI-ல் விளையாடுவது இல்லை. ஆஸி., தொடரில் அக்ஷர், வாஷிங்டன் என 2 ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். பேட்டிங்கிற்கு கம்பீர் கொடுக்கும் முக்கியத்துவமே இதற்கு காரணம் என ரசிகர்கள் SM-ல் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மை முதலில் வாட்டி வதைப்பது சளிதான். இதை தடுக்க சில பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி அண்டவே அண்டாது. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்டவை சளி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேபோல் மழைகாலத்தில் நாம் தவிர்க்கும் ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்டவையும் சளி பிடிக்காமல் தடுக்க உதவுமாம்.
Sorry, no posts matched your criteria.