India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். ஆல்ரவுண்டர்களான சுந்தர் & நிதிஷ் ரெட்டி ஆகியோர் பெரிய தாக்கத்தை பவுலிங்கில் கொடுக்கவில்லை. இவர்களில் யாராவது ஒருவருக்கு பதிலாக அணியில் குல்தீப் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி ( திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

பாதங்களில் வலி உள்ளவர்களுக்கு `கான்ட்ராஸ்ட் பாத்’ சிகிச்சை பலனளிக்கும். இதை வீட்டிலேயே செய்யலாம். ஒரு பாத்திரத்தில் வெந்நீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இருவேளையும் செய்தால் வலி மறையும்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்கு பின் பெரிதாக படங்களில் தலை காட்டவில்லை. ஆனாலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என கவர்ச்சியில் ஆளை சாய்க்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் அழகில் மயங்கிய இளசுகள் ஹார்ட்டின்களை பறக்கவிடுகின்றனர். அவரது அழகை ஆராதிக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.

தமிழக அரசியல் களம் ‘திமுக vs அதிமுக’ என்ற பாரம்பரிய வடிவத்திலேயே நீடிப்பது தான் ஆரோக்கியமானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு என்றும், அது தெரியாமல் அதிமுக பாஜகவுடன் உறவாடுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக, விசிகவுக்கு இடையில் எந்த விரிசலும் இல்லை என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.

வெள்ளிக்கிழமை அன்று காலை வீட்டை சுத்தம் செய்து, விளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட்டு விட்டு, மாலையில் லட்சுமி தேவிக்கு தாமரை மலர் கொண்டு வழிபட வேண்டும். மேலும், மஞ்சள், குங்குமம், இனிப்பு நைவேத்தியம் படைத்து முழு மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து 3 வெள்ளிக்கிழமைகள் இப்படி வழிபடுவதால், லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, வீட்டில் லட்சுமி கடாட்சம் கூடி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.24) கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கடந்த 2 நாள்களாக தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, கலெக்டர்கள் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

*மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். *இஞ்சி சாறு இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சக்கரை அளவையை கட்டுபடுத்தும். *தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். *கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இஞ்சி சாறு உதவும். *இஞ்சி சாறு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

கரூர் சம்பவத்துக்கு பின் வீட்டிலேயே முடங்கியுள்ள விஜய் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு, பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டுள்ளார் . மாலை 3 – 5 மணிக்குள் பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டுமானத்துக்கு தடை விதிக்க மறுத்த HC, பக்தர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் கட்டங்களை பயன்படுத்த உத்தரவிட்டது. மேலும் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என TN முழுவதும் உள்ள கோயில்களுக்கும் அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.