India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? நாடு முழுவதும் நாளை(அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE.

‘நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்’. இது, பருவ மழை காலத்தில் அதிகம் பார்க்கப்படும் செய்தி. அறுவடைக்கு பிறகு நெற்பயிர்களை, அரசு கொள்முதல் செய்வதற்கு முன் சேமித்து வைக்க உருவாக்கப்பட்ட இடமே நெல் சேமிப்பு கிடங்கு. இங்கு வைக்கப்பட்டும், நெல் மூட்டைகள் நனைவதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? அது பற்றியும், நெல் நனையாமல் இருப்பதற்கான தீர்வுகள் பற்றியும் அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க.

மாணவர்களே, பெரிய பெரிய PDF-களை படிக்க நேரமே இல்லையா? உங்களுக்காகவே ‘ChatPDF’ என்ற AI Tool இருக்கிறது. இந்த AI Tool-ல் உங்கள் PDF-ஐ அப்லோடு செய்தால் போதும். உங்களுக்கு பதில் அதுவே முழு PDF-ஐ படித்து முடித்துவிடும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி அதனிடம் கேள்வியாக கேளுங்கள். அது, PDF-ல் இருக்கும் பதில்களையும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும். மாணவர்கள் படிப்புக்கு உதவும், SHARE.

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், NDA, INDIA கூட்டணி தலைவர்கள் பம்பரம் போல், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்த நிலையில், வெள்ளி விலை தலைகீழாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹36,000 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் பலர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என கரூர் துயரில் பாதிக்கப்பட்ட பெற்றோர் பேசியதை ஜி.பி.முத்து விமர்சித்திருந்தார். அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி என ஜி.பி.முத்து பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான் எனவும் இப்படி பேசித்தான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் சாடியுள்ளார்.

சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்த நிலையில், அதிகாரிகளிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொடிய நோயான போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 24-ம் தேதி ‘உலக போலியோ தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ‘Every Child, Every Vaccine, Everywhere, is a call to ensure that no child, in any setting, is left unprotected’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில், டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்கு கரையை, இஸ்ரேல் சட்டப்பூர்வமாக இணைக்க முயன்றால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அரபு நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளதால், இஸ்ரேலின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.