India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த ஜனவரியில் நடந்த ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியில் இருந்து வெளியேறியது குறித்து ரோஹித் மனம் திறந்துள்ளார். அந்த போட்டியில் தான் சரியாக விளையாடாததால், 4 போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கில்லுக்கு வாய்ப்பு வழங்க கோரி பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவிடம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அணிக்கு என்ன தேவையோ அதையே அனைவரும் செய்ததாகவும் கூறியுள்ளார்.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், சுற்றுலாவின்போது எவ்வற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பலருக்கு தெரியவில்லை. குறிப்பாக, செல்லும் இடங்களின் பாரம்பரியம், உள்ளூர் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். காடு, மலை சார்ந்த பகுதிகள் எனில், பறவைகள், பிற உயிரினங்களின் வாழ்வியலில் குறிக்கிடக் கூடாது. குறிப்பாக, செல்ஃபி எடுத்தல் போன்றவை தவிர்க்கவும்.
சைவம் மற்றும் வைணவம் மதங்களை பெண்களுடன் ஒப்பிட்டு, அமைச்சர் பொன்முடி மிக மோசமாக பேசினார். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பும் கோரினார். ஆனாலும், அவரை பதவி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஐகோர்டில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
▶ நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை. ▶ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். ▶ கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது. ▶மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
கூலி படத்தில் நடிக்க லோகேஷ் என்னிடம் வந்து கதையை கூறினார். நான் எதுவும் கேட்கவில்லை. ரஜினி சார் பக்கத்தில் நின்றாலே போதும் என்றேன் என நடிகர் உபேந்திரா தெரிவித்துள்ளார். மேலும், நான் ஏகலைவன், ரஜினி சார் எனக்கு துரோணாச்சாரியார் போன்றவர். அவரை அந்த அளவுக்கு ஃபோலோ பண்றேன். அவருடைய படத்தில நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற <<16120626>>கிருஷ்ணசாமி<<>>, பங்கு தருபவர்களிடம் மட்டுமே புதிய தமிழகம் கூட்டணி வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பட்டியல் வெளியேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் செய்து அவர் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக முக்கிய தலைவர்கள், அவரிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது.
DC அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும்போது RR கேப்டன் சஞ்சு சாம்சன், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியால் பாதியிலேயே வெளியேறினார். இதனால், அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பு ரியான் பராக்கிடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது RR அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அறவழியில் போராட்டம் நடத்திய பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டிய அவர், அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும்; அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது. கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். ▶பொருள்: உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் சூடு ஆரம்பித்துள்ள நிலையில் டிடிவிக்கு எதிரான வழக்கை EPS வாபஸ் பெற்றுள்ளார். சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்த TTV, OPS நிலை என்ன ஆகும் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், தென்மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை குறிவைத்து, டிடிவி உடன் இணக்கமாக செல்ல முடிவெடுத்து, இபிஎஸ் வழக்கை வாபஸ் வாங்கியதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.