India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 கிராமின் டாக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு இங்கே <

சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த அவர், தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். CM உத்தரவின் பேரில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிதாக நடக்கும் ஒரு சம்பவத்தை பார்க்கும்போது, ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது தான் Dejavu. இது மூளையில் ஏற்படும் சிறிய சிக்னல் பிழையால் நடக்கிறது. அதாவது, புதிதாக ஒரு சம்பவம் நடக்கும்போது அதை hippocampus பகுதி Store செய்து வைக்கும். அப்போது உங்கள் மூளை, இதை ஏற்கனவே பார்த்ததுபோல தவறான சிக்னல் அனுப்புவதால் hippocampus பகுதி குழம்புகிறது. இதனால்தான் உங்களுக்கு Dejavu ஏற்படுகிறது. SHARE.

ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது சமீபத்திய சமூக ஊடக பதிவுகளில், சேலையில் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. காந்தாரா படத்தில் இளவரசி கனகவதியாக கலக்கிய ருக்மிணி, அதே காஸ்டியூமான சேலையை அணிந்து தொடர்ச்சியாக போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

10, +2 பொதுத்தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை தற்போதே தயார் செய்துவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஸிடம் பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா இன்று ஒப்படைத்துள்ளார். நவ.4-ம் தேதி தேர்வு தேதி அடங்கிய விவரங்களை அமைச்சர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன மாணவர்களே, ரெடியா..!

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அறிக்கை விட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்களின் அரசால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்னும் பல துணை முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என, CM வேட்பாளரும், RJD தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பிஹார் மக்கள் தொகையில் 2.5% உள்ள மீனவர் சமுதாயத்தை சேர்ந்த முகேஷ் சஹானி, துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஆளும் NDA கூட்டணியின் CM வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில செயல்கள் இயற்கையாகவே நமது உடல் மற்றும் மனதை புத்துணர்வோடு வைத்துக்கொள்ள உதவும். அவை என்னென்ன விஷயங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை, ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க.

<<18091994>>தங்கம் <<>>விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் ஏறிய வேகத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறது. 1 கிலோ வெள்ளி இன்று காலையில் ₹3,000, மாலையில் ₹1,000 குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கிராம் ₹170-க்கும், 1 கிலோ ₹1.70 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹37,000 சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2011-ல் மோகன்லால் வீட்டில் IT ரெய்டு நடத்தியபோது, யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது சட்டவிரோதம் என்பதால், உரிமம் வேண்டி அரசிடம் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதனால் 2016-ல் கேரள அரசு அவருக்கு உரிமம் வழங்கியிருந்தது. ஆனால், இது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்படவில்லை. எனவே, தற்போது இதனை சுட்டிக்காட்டி அரசின் உரிமத்தை, HC ரத்து செய்துள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.