India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தி வருபவர் பிரித்விராஜ். அவர் இயக்கிய
‘எம்புரான்’ படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வசூலை வாரிக்குவித்தது. இதனிடையே ‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருது பிரித்விராஜுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் சிறந்த கதைக்கான விருது ‘காதல் தி கோர்’ படத்துக்கும், சிறந்த படத்துக்கான விருது ‘ஆட்டம்’ படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல கர்நாடக (KTK ) மூத்த வழக்கறிஞர் ஷரத் ஜாவலி (84) காலமானார். ஹாவேரியை சேர்ந்த அவர், பஞ்சாப் EX ஆளுநர் டி.சி. பாவேட்டின் கொள்ளு பேரன். கர்நாடகாவுக்காக 60 ஆண்டுகள், உச்சநீதிமன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். அதில் கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடையேயான காவிரி, கிருஷ்ணா நதிநீர் போன்ற பல்வேறு நதிநீர் விவகார வழக்குகளும் அடங்கும். அவரின் தந்தை ஜாவலியும் வழக்கறிஞர்தான்.
ஜென்சால் நிறுவன நிதிகளை மோசடியாக பயன்படுத்தியதால், அதன் இணை நிறுவனர்களின் கம்பெனியான ப்ளூ ஸ்மார்ட் செயல்பட SEBI இடைக்கால தடைவிதித்துள்ளது. இதனால் EV சவாரி நிறுவனமான ப்ளூ ஸ்மார்ட் தனது சேவையை நிறுத்தியுள்ளது. முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், 90 நாள்களுக்குள் சேவை மீண்டும் தொடங்காவிட்டால், பயனர்களின் வாலட் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால், அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும்’ என்றார். இவரின் கருத்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ‘தெய்வத்தை வைத்து வாக்கு கேட்டால் அது பாஜக, அந்த தெய்வமே வாக்களித்தால், அதுதான் திமுக’ என கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
நடிகர் ஸ்ரீ, சிசோபெர்னியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ, ஹரியானாவில் இருப்பதாகவும், அவரை மீட்டு சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். சிசோபெர்னியா என்பது யாரோ காதுக்குள் பேசுவது போல இருக்கும் ஒருவித மனநோய். இந்த நோய் குறித்து நீங்கள் கேள்விப்பட்டு உள்ளீர்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
மத்திய அரசின் Nuclear Power Corporation of India Limited-ல் இருக்கும் 400 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. சிவில், மெக்கானிக்கல் Engg. படித்து, 26 – 31 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். மாதச் சம்பளம் ₹56,100 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. முழு தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
சமீபத்தில் எத்தனை என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன என்று காவல்துறைக்கு ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கோர்ட், காவல்துறையினரின் பாதுகாப்புக்குதான் துப்பாக்கி அளிக்கப்பட்டு உள்ளது என்றும், சுடுவதற்கு அல்ல என்றும் தெரிவித்தது. குற்றவாளிகளை காலுக்கு கீழேதான் சுட வேண்டும் என்றும் காவல்துறைக்கு கோர்ட் அறிவுறுத்தியது.
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா தரிசன வசதி அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.
தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் மாநாட்டை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதலாவதாக சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களை ஒருங்கிணைத்து முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படுகிறது.
1 – 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 3-வது மொழியாக ஹிந்தி கற்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள பாஜக கூட்டணி அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிப்பதாக TN உள்ளிட்ட மாநிலங்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் இந்த அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.