News October 24, 2025

விஜய் இப்படி செய்தால் தற்கொலைக்கு சமம்: டிடிவி

image

EPS-ன் தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால், அது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே EPS கூட்டணி குறித்து ஏதேதோ கூறி வருகிறார் எனவும், அவர் செய்த துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள விஜய் வருவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 24, 2025

போரின் போது தங்க நகைகளை வாரி வழங்கிய பெண்கள்

image

USA, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் உள்ள தங்கத்தை காட்டிலும் இந்திய பெண்களிடம் கூடுதலாக (25,488 டன்) தங்கம் இருப்பதாக X-ல் புள்ளிவிவரம் வெளியானது. இந்த புள்ளிவிவரம் தனது சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். 1962 சீன போரின் போது, இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய பெண்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார்.

News October 24, 2025

உங்க போன் ஸ்லோவாக இருக்கா..

image

உங்கள் போன் மிகவும் ஸ்லோவாக இருக்கிறதா? இந்த 3 ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க ✱அனைத்து App-களின் Cache-க்களை டெலிட் பண்ணுங்க. Settings-> Apps -> Cache-களை டெலிட் பண்ணலாம் ✱பல மாதங்களாக யூஸ் பண்ணாம வைத்திருக்கும் App-களை Uninstall பண்ணுங்க. இவை அதிகளவு Storage-ஐ பிடித்து வைத்திருக்கும் ✱ஹோம் ஸ்கிரீனில் Live wallpapers & Widgets-கள் அதிகளவு ஸ்டோர்ஜ்களை பிடித்துவிடும். அவற்றை நீக்கிவிடுங்கள். SHARE IT.

News October 24, 2025

மத்திய அரசில் 348 காலியிடங்கள்.. ₹30,000 சம்பளம்!

image

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 கிராமின் டாக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE THIS.

News October 24, 2025

மழையை எதிர்கொள்ள தயார்: கே.என்.நேரு

image

சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த அவர், தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். CM உத்தரவின் பேரில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

News October 24, 2025

Dejavu ஏற்படுவது எப்படி தெரியுமா?

image

புதிதாக நடக்கும் ஒரு சம்பவத்தை பார்க்கும்போது, ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது தான் Dejavu. இது மூளையில் ஏற்படும் சிறிய சிக்னல் பிழையால் நடக்கிறது. அதாவது, புதிதாக ஒரு சம்பவம் நடக்கும்போது அதை hippocampus பகுதி Store செய்து வைக்கும். அப்போது உங்கள் மூளை, இதை ஏற்கனவே பார்த்ததுபோல தவறான சிக்னல் அனுப்புவதால் hippocampus பகுதி குழம்புகிறது. இதனால்தான் உங்களுக்கு Dejavu ஏற்படுகிறது. SHARE.

News October 24, 2025

சேலையில் ருக்மிணி வசந்த்

image

ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது சமீபத்திய சமூக ஊடக பதிவுகளில், சேலையில் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. காந்தாரா படத்தில் இளவரசி கனகவதியாக கலக்கிய ருக்மிணி, அதே காஸ்டியூமான சேலையை அணிந்து தொடர்ச்சியாக போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

News October 24, 2025

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

image

10, +2 பொதுத்தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை தற்போதே தயார் செய்துவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஸிடம் பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா இன்று ஒப்படைத்துள்ளார். நவ.4-ம் தேதி தேர்வு தேதி அடங்கிய விவரங்களை அமைச்சர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன மாணவர்களே, ரெடியா..!

News October 24, 2025

திமுக கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை: நயினார்

image

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அறிக்கை விட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்களின் அரசால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 24, 2025

பிஹார் தேர்தல்: பல துணை முதல்வர் வேட்பாளர்கள்

image

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்னும் பல துணை முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என, CM வேட்பாளரும், RJD தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பிஹார் மக்கள் தொகையில் 2.5% உள்ள மீனவர் சமுதாயத்தை சேர்ந்த முகேஷ் சஹானி, துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஆளும் NDA கூட்டணியின் CM வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!