India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி அருகே பழிக்குப் பழியாக மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைதாகியுள்ளனர். கீழப்புலியூரை சேர்ந்த குத்தாலிங்கம், மனைவியுடன் நேற்று ரேஷனில் பொருள் வாங்க சென்றபோது ஒரு கும்பல் கொலை செய்து தலையை எடுத்து சென்றது. தலையை, பட்டுராஜா என்பவர் கொல்லப்பட்ட இடத்தில் அக்கும்பல் போட்டுச் சென்றது. இதுதொடர்பாக 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை HC உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும், அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் TN அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரித்தார். பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக வீடியோ ஆதாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது என குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அரசமைப்பின் 145வது பிரிவை விளக்குவதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை என்றும், அதை மறுத்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், மத ரீதியான சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்துக்களிடம் இருந்து நாம் வேறுபட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். நமது மதம், பழக்கவழக்கம், மரபு உள்ளிட்டவை இந்துக்களிடம் இருந்து வேறுபாடானது எனவும், இதனை தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் அசிம் வலியுறுத்தினார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற பருப்புகளுடன் பேரீச்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். வேர்க்கடலையில் இருக்கும் ஜிங்க், விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறதாம். மேலும், வெங்காயம், பூண்டு இரண்டும் ஆண்மை பெருக்கியாகவும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலில் முக்கியமானதாகவும் இருக்கிறதாம். SHARE IT.
SBI, BOI வங்கிகளைத் தொடர்ந்து, <<16115403>>கடன்கள்<<>> மீதான வட்டியை BOM-ம் குறைத்துள்ளது. SBI வங்கி, வீடு, வாகன கடன்கள் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் நேற்று முன்தினம் குறைத்தது. பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி (IOB), இந்தியன் வங்கியும் கடன்கள் மீதான வட்டியை குறைத்தன. இதையடுத்து பேங்க் ஆப் மகாராஷ்டிராவும் (BOM ) தற்போது வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையில் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, எனினும் சில <<16127973>>நிபந்தனைகளை <<>>மட்டும் விதித்துள்ளது. தகுந்த ஆவணங்களுடன் 7 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு, 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஜூன் 1 வரை அவர்களுக்கு 45 நாள்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது. அதேபோல் சில தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதியும், வேறு சில தனியார் பள்ளிகள் ஜூன் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளன. இதை கணக்கிட்டால் 49-52 நாள்கள் விடுமுறை வருகின்றன. உங்களுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?
தானாகவே போன் Reboot ஆகும் அம்சத்தை Google Play Services 25.14 அப்டேட்டில் Android சேர்த்துள்ளது. இது ‘Inactivity Reboot’ என அழைக்கப்படுகிறது. போன் 3 நாளுக்கு யூஸ் செய்யப்படாமல் இருந்தால், தானாகவே ‘Before First Unlock’(BFU) என்ற நிலையை போன் அடையும். கரெக்ட்டான பாஸ்வோர்டை பதிவிட்டால் மட்டுமே, போனை திறக்க முடியும். இல்லையேல், போன் மொத்தமாக Reboot ஆகி விடும்.
Sorry, no posts matched your criteria.