India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆசிய கோப்பையை அபுதாபியில் உள்ள ACC தலைமையகத்தில் இருந்து அதன் தலைவரும், பாக்., அமைச்சருமான <<18075095>>மொஹ்சின் நக்வி<<>> இடமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. BCCI அதிகாரிகளின் சமீபத்திய அபுதாபி பயணத்தின் போது இது கண்டறியப்பட்டதாகவும், தற்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. பாக்., அமைச்சரிடம் இருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததால், இந்த உரசல் நீடித்து வருகிறது.

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறதே என அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 22 காரட் தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹6,400 குறைந்துள்ளது. அக்.17-ல் சவரன் ₹97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு <<18091994>>தொடர் சரிவிலேயே<<>> உள்ளது. வெள்ளி விலையும் 1 வாரத்தில் கிலோ ₹33,000 வரை சரிந்துள்ளது. அதனால், முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.

பிரபல நடிகைகள், தங்களின் திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் பாதியில் நிறுத்திவிட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று, அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. அந்த நடிகைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழ் நடிகைகளும் உள்ளனர். இவர்கள் தவிர்த்து, வேறு ஏதேனும் நடிகைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

IIT, IIM-களில் படித்தவர்களை பணிக்கு அமர்த்தும் முன்னணி நிறுவனங்களின் மனநிலை மாறி வருகிறது. ‘Blind’ செயலி நடத்திய சர்வேயில் ஆப்பிள், Nvidia, Zoho போன்ற நிறுவனங்கள், Tier 3 கல்லூரிகளில் படித்தவர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தியது தெரியவந்துள்ளது. பிராண்டட் கல்வி நிறுவனங்கள் வேலை பெறுவதை முதன்மையாக கொண்டு செயல்படுகின்றன. ஆனால், ஊழியரின் வளர்ச்சி அவரது திறமை சார்ந்தது என கம்பெனிகள் கருதுகின்றன.

மகாராஷ்டிராவில் அரசு பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு SI கோபால்தான் காரணம் என அந்த பெண் தனது கையில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். கோபால் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, 3 மாதங்களுக்கு முன்பே டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்கொலை செய்துள்ளார்.

திபெத்தில் உள்ள பாங்காங் ஆற்றுப்படுகையில் சீனா சத்தமே இல்லாமல், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது. வெடிமருந்து குடோன், கட்டளை, கட்டுப்பாடு மையங்கள், ஏவுகணை ஏவுதள கட்டுமானங்களை நிறுவி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பகுதி இந்திய எல்லையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. 2020-ல் எல்லை மோதல்கள் நடந்த இடங்களில் இப்பகுதியும் ஒன்றாகும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் மிகவும் அவசியம். இதற்கு, ஏராளமான சுய பராமரிப்பு பழக்கங்கள் உள்ளன. சிறிய பயிற்சி கூட தினசரி செய்தால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவை என்ன பயிற்சிகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செய்ய விரும்பும் பயிற்சி எது? கமெண்ட்ல சொல்லுங்க.

முடி கொட்டுது என்பதற்காகவே ஹெல்மெட் அணியாமல் பலர் பைக் ஓட்டுறாங்க. ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உயிரை பணயம் வைத்து முடியை காப்பாற்றுவதால் என்ன பயன்? ஹெல்மெட் அணிந்தாலும் முடி கொட்டாமல் இருக்க சில Tips இருக்கு. ➤ஹெல்மெட்டின் உள்பகுதியை சுத்தம் செய்யுங்கள் ➤காட்டன் துணியை போட்ட பிறகு ஹெல்மெட்டை அணியுங்கள் ➤காற்றோட்டமான ஹெல்மெட்டை தேர்ந்தெடுங்கள் ➤ ஈரமான முடியில் ஹெல்மெட் அணிய வேண்டாம். SHARE.

பிஹாரின் அடுத்த CM யார் என்பதை பிரசாந்த் கிஷோர் பெறும் வாக்குகள் தீர்மானிக்க உள்ளன. சமீபத்திய சர்வேயின் படி, 57% இளைஞர்கள் நிதிஷ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். PK இல்லாவிட்டால் இந்த வாக்குகள் பெரும்பாலும் தேஜஸ்விக்கே செல்லும். ஜெகநாத் மிஸ்ராவுக்கு பிறகு 35 ஆண்டுகளாக உயர்சாதி CM இல்லாத விரக்தியில் இருக்கும் Brahmins & Upper castes, PK பக்கம் திரும்பினால் அது NDA வெற்றியை பாதிக்கும்.

EPS-ன் தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால், அது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே EPS கூட்டணி குறித்து ஏதேதோ கூறி வருகிறார் எனவும், அவர் செய்த துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள விஜய் வருவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.