India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி ( திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் சேவையை தொடங்க தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக மும்பை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் சிக்னல் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 விநாடிக்கு 600 GB வேகத்தில் இண்டர்நெட் சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது.

யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜாராம், புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அவர் அறிவித்தார். மேலும், கட்சியின் லோகோவையும் ராஜாராம் அறிமுகம் செய்து வைத்தார். 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.

பல்வேறு நட்சத்திரங்கள் நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் மைதானத்தை கடந்து, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளாக மாறியுள்ளனர். அவர்கள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.

தீபாவளியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர். இதுதொடர்பாக 2 ISIS பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் மால் மற்றும் பூங்காவில், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மலேசியா பாஸ்கர் காலமானார் . பாடிகார்ட், சாம்ராஜ்ஜியம், பாக்ஸர், உள்பட 250+ மலையாள படங்களிலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். திரையில் ‘Fight – Malaysia Bhaskar’ என்று பார்த்ததுமே ரசிகர்களின் கைத்தட்டல், விசில் பறக்கும் அளவுக்கு மலையாளத்தில் பிரபலமான இவர், மலேசியாவில் தமிழ் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆசிய கோப்பையை அபுதாபியில் உள்ள ACC தலைமையகத்தில் இருந்து அதன் தலைவரும், பாக்., அமைச்சருமான <<18075095>>மொஹ்சின் நக்வி<<>> இடமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. BCCI அதிகாரிகளின் சமீபத்திய அபுதாபி பயணத்தின் போது இது கண்டறியப்பட்டதாகவும், தற்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. பாக்., அமைச்சரிடம் இருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததால், இந்த உரசல் நீடித்து வருகிறது.

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறதே என அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 22 காரட் தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹6,400 குறைந்துள்ளது. அக்.17-ல் சவரன் ₹97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு <<18091994>>தொடர் சரிவிலேயே<<>> உள்ளது. வெள்ளி விலையும் 1 வாரத்தில் கிலோ ₹33,000 வரை சரிந்துள்ளது. அதனால், முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.

பிரபல நடிகைகள், தங்களின் திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் பாதியில் நிறுத்திவிட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று, அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. அந்த நடிகைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழ் நடிகைகளும் உள்ளனர். இவர்கள் தவிர்த்து, வேறு ஏதேனும் நடிகைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

IIT, IIM-களில் படித்தவர்களை பணிக்கு அமர்த்தும் முன்னணி நிறுவனங்களின் மனநிலை மாறி வருகிறது. ‘Blind’ செயலி நடத்திய சர்வேயில் ஆப்பிள், Nvidia, Zoho போன்ற நிறுவனங்கள், Tier 3 கல்லூரிகளில் படித்தவர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தியது தெரியவந்துள்ளது. பிராண்டட் கல்வி நிறுவனங்கள் வேலை பெறுவதை முதன்மையாக கொண்டு செயல்படுகின்றன. ஆனால், ஊழியரின் வளர்ச்சி அவரது திறமை சார்ந்தது என கம்பெனிகள் கருதுகின்றன.
Sorry, no posts matched your criteria.