India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த போட்டோ உங்களை உலுக்காமல் இருக்காது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த காசா சிறுவனின் போட்டோ தான் World Press Photo of the Year 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய புகைப்படக் கலைஞர் சமர் அபு எலுஃப் எடுத்த போட்டோவில், 2 கைகளையும் இழந்து, முகத்தில் ‘எப்போது இந்த கொடுமை தீருமோ’ என நீங்காத சோகத்துடன் சிறுவன் அமர்ந்திருக்கிறான். உலகின் எதிர்காலத்தை போர்கள் இருட்டில் ஆழ்த்தி விடுகின்றன.
ரோஹித் ஓய்வு பெறப்போகும் நேரத்தில், ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை கொடுக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். IPL 2025-ல் ரோஹித்தின் பெர்ஃபாமன்ஸ் சீரானதாக இல்லை எனவும், அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறுகிறார் என்றும் சேவாக் கூறினார். நடப்பு IPL தொடரில் இதுவரை ரோஹித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே. Retire ஆவதற்கு முன், ரோஹித் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடுவாரா?
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, மே 7-ம் தேதி வரை <
அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என CM ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது பொதுவெளியில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மூத்த அமைச்சர்கள் <<16019356>>துரைமுருகன்<<>>, <<16061152>>பொன்முடி<<>> ஆகியோர் அண்மையில் பொதுவெளியில் மாற்றுத்திறனாளிகள், சைவம், வைணவம், பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.
பிரபல தொழிலதிபரான சுப்பையா வி ஷெட்டி (92) மாரடைப்பால் காலமானார். கர்நாடகாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள ராமகிருஷ்ணா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், உடுப்பி ஹோட்டல்கள் தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு பல லட்சம் பேருக்கு கல்வி உதவியை செய்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார். #RIP
IPL தொடரில் SRH அணிதான் முதலில் 300 ரன்களை விளாசும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரியாக உள்ளது. MI vs SRH அணிகளின் மேட்ச்சுக்கு முன்னர், டேல் ஸ்டெய்ன், SRH இந்த போட்டியில் 300 ரன்களை விளாசும் என பதிவிட்டார். மேட்ச்சுக்கு பிறகு, MI வெளியிட்டுள்ள பதிவில், ‘டேல் ஸ்டெய்ன் சொன்னது போல 328 ரன்கள் எடுத்தது (இரு அணிகளின் ரன்களையும் சேர்த்து) என கலாய்த்துள்ளது.
தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு *சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் *தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் *உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக்கொடு.
விதை மற்றும் வெஜிடெபிள் எண்ணெய்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இந்த எண்ணெய்களில் இருக்கும் Linoleic acid என்ற ஒமேகா-6 Fatty acid மார்பகப் புற்றுநோயை 3 மடங்கு வரை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது தானே!
கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி பி.தியாகராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்த தியாகராஜன் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சல்லடை போட்டு சோதனையிட்டனர். இறுதியில் வெறும் புரளி என தெரியவந்தது. இமெயிலில் மிரட்டல் விடுத்த நபர் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.