India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ்(85) மாரடைப்பால் காலமானார். இவரின் தலைமையில் இந்திய அணி, 108 தங்கம், 74 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்களை பல்வேறு தொடர்களில் வென்றுள்ளது. இதில் 3 ஒலிம்பிக் பதக்கங்களும் அடங்கும். இவருக்கு 2001-ம் ஆண்டில் இந்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கி கெளரவித்தது. #RIP
90’s கிட்ஸ்களின் ஃபேவரெட் ஹீரோவாக திகழும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலையுலகில் அவரது பங்களிப்பை பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்படுகிறது. ஜாக்கி சான் நடிப்பில் கடைசியாக 2023-ல் ‘ரைட் ஆன்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. உங்களுக்கு பிடித்த ஜாக்கி சான் படம் எது?
PM மோடி தலைமையிலான அவசரக் கூட்டத்தில், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தீவிரவாதிகளுக்கு எதிராக இன்றிரவு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்முனை தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாம். இந்தியா தாக்குதல் நடத்தப் போவதாக பாக்., அமைச்சர் <<16262452>>அட்டாவுல்லா தரார் <<>> ஏற்கனவே கூறியிருந்தார்.
தேமுதிக முக்கிய பொறுப்புகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ள பிரேமலதா, கடலூரில் ஜன.9-ல் கட்சியின் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போதே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மாநாட்டின் மூலம் கட்சியின் பலத்தை நிரூபித்த பிறகே, கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கூடுதல் சீட்களை பெற பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி.,யில் 50 வயது பெண் ஒருவர் 30 வயது பேரனுடன் தகாத உறவில் இருந்ததோடு அவரை திருமணமும் செய்து உள்ளார். லக்னோவை சேர்ந்த இந்திராவதி, பேரன் உறவு கொண்ட ஆசாத்துடன் நெருங்கி பழகியதை அவரது கணவர் சந்திரசேகர் பெரிதாக கருதவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டதோடு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தருமபுரியில் பிரேமலதா தலைமையில் தேமுதிக பொதுக்குழு கூடியது. இதில், சென்னை கோயம்பேடு 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விஜயகாந்துக்கு கடந்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
TNPSC குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க (ஏப்.30) இன்றே கடைசி நாளாகும். துணை ஆட்சியர் முதல் உதவி வனப் பாதுகாவலர் வரை மொத்தம் 72 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏப்.1-ம் தேதி வெளியானது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
டெல்லியில் PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து 6-வது நாளாகப் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஎஸ்இ (ICSE) 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. results.cisce.org மற்றும் <
’ஊர்ந்து’ என்ற வார்த்தையை கேட்டாலே அதிமுகவினருக்கு கோபம் வருகிறது என CM ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாப்பூர் MLA த. வேலு இல்லத் திருமண விழாவில் பேசிய அவர், மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்மாதிரியான ஆட்சியை திமுக வழங்கி வருகிறது என்றார். நேற்று பேரவையில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஊர்ந்து கொண்டிருந்தது என CM பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.