India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்த நாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை தொடங்கப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
*1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்த நாள்.
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

நெல் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17%-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பலத்த மழையின் காரணமாக அதை 22%-ஆக குறைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை அளவை ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைந்துள்ளது. இந்த குழுக்கள் இன்றும், நாளையும் செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறது.

சீரகம், ஓமம், சோம்பு ஆகிய மூன்றையும் ஊற வைத்த நீரை காலையில் குடிப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எதிர்பாராத அளவில் மேம்படும். ▶செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் சிறப்பாக இருக்கும் ▶உடல் எடையில் பெரிய மாற்றத்தைக் காணலாம் ▶உங்கள் சருமம் இயற்கையான ஆரோக்கியத்தை பெறும்▶கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT

*வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா *மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வெற்றிக் கூட பெறாமல் பாகிஸ்தான் வெளியேற்றம் *காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான டி20-ல் களமிறங்க தயார்

*மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, மனதை மாற்ற முடியாதவர்களால் எதையும் மாற்ற முடியாது. *இதைச் செய்யவே முடியாது என்று கூறும் நபர்கள் அதைச் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. *சரியான வாய்ப்புக்காக காத்திருக்காதீர்கள், அதை உருவாக்குங்கள். *உங்கள் சோகமான தருணங்களை மணலில் எழுதுங்கள், உங்கள் நல்ல தருணங்களை கல்லில் எழுதுங்கள். *கற்பனையே படைப்பின் ஆரம்பமாகும்.

பொதுவாக தீ உள்பட எந்த காயமாக இருந்தாலும் முதலில் பலர் தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்வது வழக்கம். ஆனால் அது தவறான வழிமுறையாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் காயத்தை ஆற்றாமல், அதன் ஹீலிங் பண்பை தடுத்து நிறுத்தி விடுமாம். எனவே காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் அதை கழுவி, அந்த இடத்தில் ஆன்ட்டி செப்டிக் கிரீம்கள் அப்ளை செய்வது போதுமானதாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT

கார் ரேஸில் தீவிரமாக உள்ள அஜித் இப்போது இந்தியா திரும்பியுள்ளார். விரையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனிடையே கேரளா பாலக்காட்டில் உள்ள கோவிலுக்கு அஜித் சென்ற போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. முக்கியமாக அதில் அஜித் நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ கவனம் பெற்றுள்ளது. தனது குல தெய்வமான பகவதி அம்மனை டாட்டூவாக அஜித் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 499 ▶குறள்: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. ▶பொருள்:பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

*ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன. *காற்று மாசு அதிகரிப்பால், டெல்லியில் காற்று சுத்திகரிப்பான், முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. *ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
* ₹256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

உலகின் 8வது கண்டத்தை புவியியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலப்பரப்பின் பாறை மாதிரிகளை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருப்பதாகவும், புதிய கண்டத்தின் 94% பகுதிகள் நீருக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 49 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த கண்டத்துக்கு Zealandia என்றும் பெயர் வைத்துள்ளனர். SHARE IT
Sorry, no posts matched your criteria.