India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஜன.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

குடும்ப பிரச்சினைகள் தொடங்கி குற்றவியல், கார்ப்பரேட், நில பிரச்னைகள் வரை இனி அனைத்து சட்ட ஆலோசனைகளையும் வாட்ஸ்ஆப்பில் பெறலாம். ஆம், இதற்கென ‘Nyaya Setu’ எனும் பிரத்யேக AI சாட்பாட்டை மத்திய சட்ட அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 7217711814 என்ற எண்ணுக்கு நீங்கள் மெசேஜ் செய்தால் போதும், 24 மணி நேரமும் நாடு முழுவதும் இலவசமாக சட்ட ஆலோசனைகளை பெறலாம். வழக்கறிஞர்கள் அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை.

அரிசி உற்பத்தியில் சீனாவை இந்தியா முந்திவிட்டதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். சீனாவின் அரிசி உற்பத்தி 145.28 மில்லியன் டன்களாக உள்ள நிலையில், இந்தியா 150.18 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளது என தெரிவித்தார். மேலும் உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் அதனை வழங்கி வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

திருச்சியில் அமித்ஷாவை SP வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். 2 நாள் பயணமாக TN வந்துள்ள அமித்ஷா, இன்று புதுக்கோட்டையில் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனையடுத்து திருச்சி நட்சத்திர விடுதியில் இரவு ஓய்வெடுக்கிறார். இந்நிலையில், அவரை அதிமுக Ex அமைச்சர் SP வேலுமணி, முன்னாள் MP-க்கள் ரத்தினவேல், குமார் உள்ளிட்டோர் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

டி20 WC-யில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற ICC பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், IPL-ல் இருந்து அந்நாட்டு வீரர் <<18757649>>முஸ்தஃபிசுர் ரஹ்மான்<<>> விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் 4 போட்டிகளை மாற்ற கோரி, ICC-க்கு <<18757914>>வங்கதேச கிரிக்கெட் வாரியம்<<>> கடிதம் எழுதியிருந்தது.

தவெக பொதுக்கூட்டத்தில் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக சுழன்றடித்த புதுச்சேரி SSP ஈஷா சிங் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் துயரத்துக்கு பிறகு முதல்முறையாக புதுச்சேரியில் நடந்த திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை அனுமதிப்பதில் குளறுபடி ஏற்பட்டபோது, துணிச்சலுடன் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஈஷா சிங் கவனம் பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது டிரான்ஸ்பர் ஆகியுள்ளார்.

தவெகவில் செங்கோட்டையன் செயல்படுவதை போல, திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியனும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, OPS அணியை சேர்ந்த சுமார் 1000 பேர் மனோஜ் பாண்டியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதன்பின் அவர் கூறுகையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தோர் ஏராளமானோர் இன்னும் திமுகவில் இணையவிருப்பதாகவும் தெரிவித்தார்.

வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்தது என்பது தன்னை ஒரு உலக மகா சக்தியாக காட்டிக்கொள்ள டிரம்ப் நடத்தும் ஒரு ஆபத்தான நாடகம் என அமெரிக்க Ex.துணை அதிபர் கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். மேலும் இந்த ராணுவ நடவடிக்கையால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எண்ணெய் வளத்திற்காக பிராந்திய அமைதியை சீர்குலைத்து, அமெரிக்க மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற போருக்குள் தள்ளும் முதிர்ச்சியற்ற செயல் என சாடியுள்ளார்.

அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவாக சிக்கன் உள்ளது. அடிக்கடி சிக்கன் சாப்பிட பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில், தினமும் சிக்கன் சாப்பிட்டால், அதிலுள்ள கலோரி, கொழுப்பினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், பொரித்த சிக்கனில் இருக்கும் கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய பிரச்னை ஏற்படலாம். அதனால், அளவாக சிக்கன் சாப்பிடுவதே நல்லது.
Sorry, no posts matched your criteria.