India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் அனைத்து திறன்களும் தங்களிடம் இருப்பதாக சிறையில் உள்ள பாக்., Ex PM இம்ரான் கான் எச்சரித்துள்ளார். அணுகுண்டு வைத்துள்ள தங்கள் நாட்டிடம் மோதலில் ஈடுபடுவதை தவிர்த்து இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தங்களை கோழைகள் என தவறாக எண்ண வேண்டாமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக தெரிவித்துள்ள PM மோடி, உயர்மட்ட அளவில் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போரை தொடங்கும் என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, X தளத்தில் #IndiaPakistanWar ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் ‘பத்ம பூஷன்’ விருது வாங்கிய பிறகு நேற்று மாலையில் சென்னை திரும்பினார். இந்நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேஸின் போது அவர் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்ய படையில் இதுவரை 600 வடகொரிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தென்கொரியா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 4,000-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்கில் பகுதியில் உக்ரைனை எதிர்த்து போரிட வடகொரிய வீரர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. PM மோடி தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு முன்பு PM மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங்குடன் தனது வீட்டில் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில், <<16264690>>பாதுகாப்பு குழுவில் <<>>மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக அலோக் ஜோஷியை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் (EPS-95) திட்டத்தின் கீழ் பென்சன் பெறுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பென்சன்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ₹7,500 கிடைக்கும். இந்த உயர்வானது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு முன்பு பலர் மாதந்தோறும் வெறும் ₹1,000 மட்டுமே பென்சன் பெற்று வந்தனர். இந்த புதிய அறிவிப்பு 78 லட்சம் பென்சன்தாரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கனடா தேர்தலில் நியூ டெமாக்ரட்டிக் பார்ட்டி(NDP) தோல்விக்கு பொறுப்பேற்று அதன் தலைவர் ஜக்மீத் சிங் பதவி விலகியுள்ளார். காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங், கடந்த 8 ஆண்டாக தலைவர் பொறுப்பில் இருந்தார். கனடாவில் RSS அமைப்பை தடைசெய்ய வேண்டும், இந்திய அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என குரல்கொடுத்தவர். தோல்வியால் தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்தாலும், NDP மார்க் கார்னி அரசில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
ராகுல் காந்தியை பயங்கரவாத ஆதரவாளர் என விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உ,பி.,-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தனது முன்னாள் தொகுதியான அமேதிக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் 24-வது பிரதமரான மார்க் கார்னி, மார்ச் 2025-ல், லிபரல் கட்சியின் தலைவரானார். 1965-ல் ஃபோர்ட் ஸ்மித்தில் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு பொருளியல் அறிஞர். நெருக்கடி மேலாண்மையில் கில்லாடியான கார்னி, 2008 உலகப் பொருளாதார மந்தநிலையின் போது முக்கியப் பங்காற்றினார். ட்ரம்ப் கொள்கைகளின் எதிர்ப்பாளர் என்று அறியப்படும் இவர், கனடா-இந்தியா உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஆர்வம் கொண்டவர்.
Sorry, no posts matched your criteria.