India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி செய்துள்ளார். சென்னையில் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த தமாகா பொதுக்குழுவில், அதிமுக தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கை உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சினிமாவில் முதலில் ₹1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ சிரஞ்சீவி. ஆனால் நடிகை யாரென்று தெரியுமா? இந்தியாவில் ஹீரோக்களுக்கு போட்டியாக முதல் முதலாக ₹1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் ஸ்ரீதேவி. 1993-ம் ஆண்டு வெளியான ‘ரூப் கி ராணி சொரோம் கா ராஜா’ படத்திற்காக இவர் ₹1 கோடி சம்பளம் பெற்றார். இந்த படத்தை தயாரித்தவர் அவரது கணவரான போனி கபூர் தான். இந்த படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார்.

NDA கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். NDA கூட்டணி தற்போது நிதிஷ் கட்டுப்பாட்டில் இல்லை; அவர் பிஹாருக்கு வெளியில் இருந்து செயல்படும் மோடி, அமித்ஷாவால் கடத்தப்பட்டுள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளியாட்களுக்கு வாக்களிக்காமல், ஒரு பிஹாரிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் ஆஸி., அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி., அணியில் அதிகபட்சமாக மேட் ரென்ஷா 56 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில் ராணா 4 விக்கெட்களையும், சுந்தர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். வெல்லுமா இந்தியா?

தீபாவளி பண்டிகைக்காக, கனடா அஞ்சல் துறை சார்பில் சிறப்பு Stamp வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம், ஹிந்தியில் தீபாவளி என்ற வார்த்தையுடன் ரங்கோலி படம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பை கொண்டாடும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலையை, இந்திய வம்சாவளியை சேர்ந்த கலைஞர் ரிது கனல் வடிவமைத்துள்ள நிலையில், இந்திய தூதரகம் இதற்கு நன்றி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று (அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என SBI அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் கேலி செய்வதாக செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக என் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்த முடியாத அளவுக்கு ரோடு படுமோசமாக உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், நான் ஃபார்ம் ஹவுஸுக்கு சென்றுவிட்டதாக அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கேலி செய்து, தவறுகளை சமாளிக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.

*சிறுநீரக உறுப்பை பாதிக்கும்.
*ஏற்கெனவே ஆஸ்துமா, நிமோனியா இருந்தால், அதன் பாதிப்பை அதிகரிக்கும்.
*டிஷ்யூவில் எண்ணெய் பதார்த்தங்களை வைத்து பிழிந்துவிட்டு சாப்பிடும்போது, டிஷ்யூவிலுள்ள ரசாயனங்கள் உடலுக்குள் செல்லும்.
*புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, காட்டன் கர்சீப்களையே பயன்படுத்துங்கள். அதனையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

வெள்ளியின் விலை ஒரு வாரத்தில் ₹36,000 குறைந்த நிலையில், <<18097995>>இன்று(அக்.25) மாறாதது<<>> முதலீட்டாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது. தீபாவளிக்கு முன்பு தங்கத்துடன் போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலை உயர்ந்ததால் பலரும் அதில் முதலீடு செய்ய தொடங்கினர். வெள்ளி விற்று தீர்ந்ததால் பலரும் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட சரிவுக்கான காரணம் என்ன என்பதை அறிய மேலே போட்டோக்களை SWIPE செய்யுங்க.

CM வேட்பாளராக EPS-ஐ விஜய் ஏற்க மாட்டார், EPS தான் தவெகவை நாடிச் செல்ல வேண்டாம் என்று TTV தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், TTV குறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று RB உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். ஊடக வெளிச்சத்துக்காகவே TTV இவ்வாறு பேசி வருவதாகவும், அவரைப் பற்றி அதிமுகவினர் பேச வேண்டாம் என்று EPS அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.