India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடையை சமாளிக்க சென்னையில் ஏ.சி புறநகர் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ₹35. பீச்-செங்கல்பட்டு வரை ₹105. தாம்பரம்-பீச் மார்க்கத்தில் 5.45AM-க்கு ( ALL STOPS) புறப்படும். பீச்-செங்கல்பட்டு 7AM-க்கும், 3.45 PM-க்கும் இயக்கப்படும். செங்கல்பட்டு-பீச் 9AM-க்கு, 5.45 PM-க்கு, பீச்-தாம்பரம் 7.35 PM-க்கும்( ALL STOPS) இயக்கப்படும். ஞாயிறு சேவை இல்லை.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள திருமண கூடத்தில் தவெகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் ஐடி மற்றும் சோஷியல் மீடியா பிரிவு சார்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். 2026 தேர்தல் வியூகம் பற்றி ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் பகிர்ந்துள்ள போட்டோ நெட்டிசன்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த போட்டோவில் அவர், ‘Baby bump’ உடன் இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நடிகை அமிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழில் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார்.
பலருக்கும் டீயுடன், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், அப்பழக்கம் மிகவும் அபாயகரமானது என Annals of Internal Medicine வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கிறது *இதயம் *மூளை பக்கவாதம் *வயிற்றுப்புண் *நுரையீரல் சுருங்குதல் *நினைவாற்றல் இழப்பு *கை, கால்களில் புண்கள் *கரு உருவாமை பிரச்னை *ரத்த சோகை *மலச்சிக்கல் என போன்ற பிரச்னைகள் வரலாம். சிகரெட்டே கெடு. உடனே நிறுத்துங்கள். SHARE IT.
விஜய் போன்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவை விட்டு விலகுவது மிகப்பெரிய இழப்பு என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கும் அவர், அரசியல் வேலைகளை பார்த்தாலும், அவ்வப்போது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் எனவும் மிஷ்கின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வெங்கட் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களும் விஜய் ஒரே அடியாக சினிமாவை விட்டு போகக்கூடாது என கூறி வருகின்றனர்.
மும்பையின் தானே பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 29 குழந்தைகள் நரக வேதனையை அனுபவித்துள்ளனர். ஆசிரம இயக்குனர் பாபன் ஷிண்டே டெய்லி மது அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். இது குறித்து புகார் செய்தால், அவர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசிரமத்தில் இருந்து தொண்டு நிறுவனத்தால், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இது குறித்து உண்மையை வெளியே சொல்லி விட்டனர். இவர என்ன பண்ணலாம்?
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண்மையில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டார். இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனாலும் அடிப்படை தொண்டனாக கட்சியில் இருப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
திமுக வரலாற்று தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் நேற்று பேசிய CM ஸ்டாலின், எந்த ஷா வந்தாலும் TNல் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறியிருந்தார். இந்நிலையில், 2026-ல் திமுகவுக்கு தோல்வி காத்திருக்கிறது என எல்.முருகன் பதிலளித்துள்ளார். NDA கூட்டணி பெரிதாக சாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சீலா மீன் ₹1,300, விளமீன், ஊளி மீன், பாறை மீன், நண்டு ஆகியவை தலா ₹600, கீழவாளை, பண்டாரி, தம்பா மீன்கள் தலா ₹300 – ₹600 வரை விற்பனையாகிறது. ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தென் மாவட்டங்களில் சில்லறை விலையில் 1 கிலோவுக்கு ₹50 – ₹100 வரை அதிகரித்துள்ளது. உங்கள் ஊரில் ஒரு கிலோ மீன் விலை என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அந்த வகையில் ஆபரணங்களிலும் தமிழர்கள் அதிக கவனம் செலுத்தியதற்கான சான்று கொடும்பாளூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. அதனுடன் அழகிய மண்பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.