India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி முடித்து, 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹44,900 மாதச்சம்பளமாக வழங்கப்படும். நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <

மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேரும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. +2 தேர்ச்சி பெற்று கார்டியோ சோனோகிராபி டெக்னிசியன், இசிஜி/ ட்ரெட் மில் டெக்னிசியன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்பவர்களுக்கு புதுமைப்பெண், வெற்றி நிச்சயம் ஆகிய திட்டங்களின் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் நவ.14 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI-ல் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் கோலி டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், தற்போது ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்திய அணி 27.2 ஓவர்களில் 168/1 ரன்களை குவித்துள்ளது. Hitman ரோஹித்தும் அரைசதம் அடித்து, 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். ODI-யில் இது விராட் கோலியின் 75-வது அரைசதமாகும்.

சத்யபாமா பல்கலை.,யில் மாணவ, மாணவிகளை தனித்தனியாக பிரித்து பாலின பாகுபாடு பார்ப்பதாக Lokpal அமைப்பில் மாணவர் புகார் அளித்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. கிளாஸ் ரூம், கேண்டீன், பஸ் என அனைத்து இடங்களிலும் இது தொடர்வதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தனது புகாரில் அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது தங்கள் வரம்பு இல்லை என Lokpal விசாரிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து?

வட இந்தியாவில் பல Highlight-டான விஷயங்கள் இருந்தாலும், நம்மூர் மக்களுக்கு சட்டென ஞாபகம் வருவது குட்கா கறைதான். அப்படி இந்தியாவில் அதிகளவில் குட்கா எடுத்துக் கொள்ளும் மாநிலங்களின் டாப் 5 பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். எந்த மாநிலம் டாப்பில் இருக்கிறது என்பதை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். குட்காவை ஒழிக்க ஒரு சிம்பிள் ட்ரிக்ஸை சொல்லுங்க?

கரூர் துயரம் நடந்து சுமார் ஒரு மாதமாகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இன்னும் சந்திக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் அவர் கரூர் செல்வதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். இதனால், தனது முடிவில் இருந்து விஜய் பின்வாங்கி இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தான் ஆறுதல் கூட சொல்வீர்களா எனவும் அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.

இந்திய அணியின் ஓபனர் Hitman ரோஹித் சர்மா 63 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 2-வது ODI-யிலும் அவர் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ODI-யில் இது ரோஹித் சர்மாவுக்கு 60-வது அரைசதமாகும். இந்திய அணி தற்போது வரை 20.1 ஓவர்களில் 119/1 ரன்களை எடுத்துள்ளது.

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.28, 29,30 ஆகிய தேதிகளில் அம்மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமகவின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றார். பாமக இளைஞரணி செயலாளராக தமிழ்க்குமரன் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்தார். முன்னதாக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி கட்சிக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.