India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அக்.30-ல் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் EPS கலந்துகொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை RB உதயகுமார் தொடங்கியுள்ளார். முதலில் உதயகுமார், ரத்தத்தில் கைரேகை பதிவு செய்ததை தொடர்ந்து, நிர்வாகிகளும் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் தனது செல்வாக்கு நிலைத்து நிற்க, வீடியோ வாயிலான விமர்சனத்தையும் RB கையிலெடுத்துள்ளார்.

பண்டைய கால இந்திய கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன உலகிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் சில கண்டுபிடிப்புகள், உலகளவில் பரவலாக பயன்பாட்டில் உள்ளவை. இதேபோன்று, வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

பிஹார் NDA சிஎம் வேட்பாளராக நிதிஷை நீண்ட இழுபறிக்கு பிறகு மோடி அங்கீகரித்துள்ளார். பாஜக வியூகத்தை மாற்றிய பின்னணி: *JD(U) வலுவிழந்த போதும், நிதிஷ் மீது பொது வாக்காளர்களுக்கு உள்ள அபிமானம் * யாதவ் தவிர்த்த OBC–க்களை கவர்வதற்கு பாஜகவில் நிதிஷ் அளவுக்கு பிரபலமான உள்ளூர் தலைவர்கள் இல்லாதது * ரொம்பவும் நெருக்கினால், தேர்தலுக்கு பிறகு நிதிஷ் மகாகத்பந்தன் அணிக்கு தாவிவிடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு.

9-1-1: Nashville டிவி தொடர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை இசபெல் தாட்(23) இளம் வயதில் உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. charcot-marie-tooth disease நோயால் கால் நரம்பு பாதிக்கப்பட்டு வீல் சேரில்தான் அவரது இறுதி நாள்களை கழித்துள்ளார். மேலும், அவரது நுரையீரல், இதயமும் பாதிக்கப்பட்டு இசபெல் தாட் உயிர்பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

‘நீங்களா மாமியார் கேரக்டர் பண்றீங்க, என்னால ஏத்துக்கவே முடியல’ என்று விஜய், ‘காவலன்’ ஷூட்டிங்கின் போது தன்னிடம் கேட்டதாக ரோஜா கூறியுள்ளார். இதேபோல், தெலுங்கு நடிகர் கோபிசந்த்தும் கேட்டதால், இனி அம்மா, மாமியார் ரோல்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனுக்கு ராஜமாதா கேரக்டர் கிடைத்தது போல, தனக்கும் வலுவான ரோல் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி முடித்து, 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹44,900 மாதச்சம்பளமாக வழங்கப்படும். நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <

மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேரும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. +2 தேர்ச்சி பெற்று கார்டியோ சோனோகிராபி டெக்னிசியன், இசிஜி/ ட்ரெட் மில் டெக்னிசியன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்பவர்களுக்கு புதுமைப்பெண், வெற்றி நிச்சயம் ஆகிய திட்டங்களின் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் நவ.14 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI-ல் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் கோலி டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், தற்போது ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்திய அணி 27.2 ஓவர்களில் 168/1 ரன்களை குவித்துள்ளது. Hitman ரோஹித்தும் அரைசதம் அடித்து, 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். ODI-யில் இது விராட் கோலியின் 75-வது அரைசதமாகும்.

சத்யபாமா பல்கலை.,யில் மாணவ, மாணவிகளை தனித்தனியாக பிரித்து பாலின பாகுபாடு பார்ப்பதாக Lokpal அமைப்பில் மாணவர் புகார் அளித்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. கிளாஸ் ரூம், கேண்டீன், பஸ் என அனைத்து இடங்களிலும் இது தொடர்வதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தனது புகாரில் அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது தங்கள் வரம்பு இல்லை என Lokpal விசாரிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து?

வட இந்தியாவில் பல Highlight-டான விஷயங்கள் இருந்தாலும், நம்மூர் மக்களுக்கு சட்டென ஞாபகம் வருவது குட்கா கறைதான். அப்படி இந்தியாவில் அதிகளவில் குட்கா எடுத்துக் கொள்ளும் மாநிலங்களின் டாப் 5 பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். எந்த மாநிலம் டாப்பில் இருக்கிறது என்பதை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். குட்காவை ஒழிக்க ஒரு சிம்பிள் ட்ரிக்ஸை சொல்லுங்க?
Sorry, no posts matched your criteria.