India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒருபக்கம் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்டா பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நகர்வில், TN நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட வரலாற்றில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 11.5 சரக்கு ரயில்கள் நிறைய நெல் மூட்டைகள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என தெரிந்தும் திருமாவளவன், வைகோ ஆகியோர் ஏன் இன்னும் கேட்கவில்லை என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது கூட்டணிக்காகவா, ஓட்டுக்காகவா (அ) தேர்தலுக்காகவா என்றும் அவர் கேட்டுள்ளார். சாதியால் வந்த வேற்றுமைகளை சினிமா பார்த்து போக்கிவிட முடியுமா என்று ’பைசன்’ படத்தை திருமா பாராட்டியதையும் மறைமுகமாக குறிப்பிட்டார்.

பல்வேறு வகையான முதலீடுகளுக்கு நடுவில், Fixed Deposit (FD) மக்களிடம் நல்ல வரவேற்பில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் 10 ஆண்டுகள் வரை FD-ல் முதலீடு செய்யலாம்.
*Suryoday Small Finance Bank – 5 ஆண்டிற்கு 5.20%
*ஜன சிறு நிதி வங்கி – 5 ஆண்டிற்கு 8%
*ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் – 18 மாதத்திற்கு 7.75%
*பந்தன் வங்கி – 2 – 3 ஆண்டிற்கு 7.20%
*ICICI, HDFC வங்கிகள் – 5 ஆண்டிற்கு 6.60%

பொதுவாக, குட்டித்தூக்கம் உற்சாகத்தை தரும் என்பார்கள். இதனால் பலரும் மதியம் சாப்பிட்டபின், ஒரு குட்டித்தூக்கம் போடுவது வழக்கம். ஆனால், தினசரி குட்டித்தூக்கம் போடுபவர்களுக்கு high BP வரும் வாய்ப்பு 12%, மாரடைப்பு ஆபத்து 24% அதிகரிக்கிறதாம். பிரிட்டனில் 3,60,000 பேரிடம் 11 yrs செய்த ஆய்வில் இதை கண்டறிந்துள்ளனர். குட்டித் தூக்கத்தால் இரவுத் தூக்கம் பாதிப்பதே, பிரச்னைக்கு முக்கிய காரணமாம். SHARE IT.

வரும் 27-ம் தேதி ‘மோன்தா’ புயல் உருவாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க அறிவுறுத்தியுள்ளது. ஹாஸ்பிடலில் ஜெனரேட்டர்களை மேடான பகுதியில் வைக்கவும், மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. கர்ப்பிணிகளை முன்கூட்டியே ஹாஸ்பிடலில் அனுமதிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா – பாக்., போரில் பாகிஸ்தானுக்கு எந்த பயனும் இல்லை என்று Ex CIA ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். ஏனென்றால் போரில் பாக்., தோற்கும் என்ற அவர், பாக்.,கின் அணு ஆயுத கிடங்குகளின் கட்டுப்பாடு USA-விடம் உள்ளதாக இந்தியாவிடம் அமெரிக்கா கூறியிருக்குமோ என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சதிஷ் ஷா(74) இன்று காலமானார். கிட்னி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மும்பையில் அவரது உயிர் பிரிந்தது. காமெடி ரோல்களில் கலக்கிய இவர், FANA, OM SHANTI OM, MAIN HOON NA என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம் பழம்பெரும் <<18059439>>நடிகர் கோவர்தன் அஸ்ரானி<<>> மறைந்த நிலையில், சதீஷ் ஷாவும் உயிரிழந்தது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ODI உலகக் கோப்பையில் விளையாடி வரும் ஆஸி., மகளிர் அணியினர், இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். நேற்று 2 வீராங்கனைகள், ஹோட்டலிலிருந்து கஃபேவுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை பைக்கில் ஃபாலோ செய்து வந்த ஒருவர், வீராங்கனைகளிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், CCTV காட்சிகளின் அடிப்படையில் அக்யூல் கான் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை போலீஸ் தாக்கிய வீடியோவை வெளியிட்ட அவரது நண்பன் சக்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் அவர் சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

அக்.30-ல் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் EPS கலந்துகொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை RB உதயகுமார் தொடங்கியுள்ளார். முதலில் உதயகுமார், ரத்தத்தில் கைரேகை பதிவு செய்ததை தொடர்ந்து, நிர்வாகிகளும் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் தனது செல்வாக்கு நிலைத்து நிற்க, வீடியோ வாயிலான விமர்சனத்தையும் RB கையிலெடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.