India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வீட்டு குழாய்களில் உப்பு அடைப்பால் தண்ணீர் வரவில்லையா? இதை பண்ணுங்க.. *தண்ணீர் தொட்டியை முதலில் கழுவி சுத்தப்படுத்தவும். *தொட்டியில் இருந்து குழாய்களுக்கு செல்லும் பைப்களை மூடி, T வடிவ பெண்ட் வழியாக 10 லிட்டர் ஆசிட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். *24 மணி நேரத்திற்கு பைப்களில் ஆசிட் நன்கு ஊறட்டும். *இப்போது T பெண்ட் வழியாக தண்ணீரை விடவும். *உள்ளே அடைத்திருந்த உப்பு கரைந்து மொத்தமும் வெளிவரும்.

‘டிராகன்’ படத்தின் மூலம் மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ள நடிகையாக வலம் வந்தார் கயாது லோஹர். ஆனால், பார்ட்டி சர்ச்சைகளால் அவரது மார்க்கெட் டல் ஆனது. அடுத்து நடிக்கும் படங்களும் தள்ளிப்போனது. இதனால், கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறாராம். முதற்கட்டமாக கிளாமர் போட்டோஷூட், வீடியோ ஷூட் ரிலீஸ் செய்ய போகிறாராம். டாப் ஹீரோக்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரது பிளானாம்.

பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்தார் ராமதாஸ். இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு, உள்கட்சி விவகாரம் குறித்து தன்னால் இப்போது பேச முடியாது என கோபத்துடன் பதிலளித்தார். அன்புமணியுடன் இருப்பவர்கள் பாமகவின் அணியே அல்ல, அது ஒரு குழு தான் என்று ராமதாஸ் நேற்று கூறியிருந்தார். இருதரப்பும் முரண்டு பிடித்துவரும் நிலையில், காந்திமதியின் நியமனம் கட்சியில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

<<18100854>>ஆஸி., மகளிர்<<>> கிரிக்கெட் அணியினரிடம் அத்துமீறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என BCCI கண்டித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. மகளிர் ODI WC-யில் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸி., அணியினர் ம.பி. ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதில் 2 வீராங்கனைகள் காஃபி குடிக்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மருது பாண்டியர், தேவர் குருபூஜையையொட்டி அக்.27, 30-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சிவகங்கை கலெக்டர் பொற்கொடி அறிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகள் இயங்காது. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி அக்.27-ல் <<18094912>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாம் சுவாசிக்கும் 50% ஆக்சிஜன் கடலில் இருந்து கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடலில் உள்ள பிளாங்க்டன் எனப்படும் சிறிய தாவரங்கள், சைனோபாக்டீரியா, ஆல்கி மற்றும் சில பாக்டீரியாக்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதைதான் கடலில் வாழும் உயிரினங்களும் சுவாசிக்கின்றன. நிறைய பேர் மரத்திலிருந்து மட்டுமே ஆக்சிஜன் கிடைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறனர். அனைவரும் இத்தகவலை தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இதற்கு TN அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து மதுபாட்டில் விற்ற அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை என்றும் விமர்சித்தார்.

*ஆசிய யூத் கேம்ஸ் கபடியில், தங்கம் வென்ற ஆடவர், மகளிர் அணியினருக்கு தலா ₹2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு. *இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தேவிகா சிஹாக் முன்னேற்றம். *பிறப்பு சான்றிதழ் மோசடி காரணமாக மல்யுத்த வீரர் சஞ்சீவை இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது. * நட்புறவு கால்பந்தில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது.

கரூர் துயரத்தால் தவெகவின் செயல்பாடுகள் முற்றிலுமாக தேக்கமடைந்துள்ளன. விஜய் மீண்டும் எப்போது களத்திற்கு வருவார் என ஆவலுடன் எதிர்நோக்கும் தவெகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நவ., முதல் வாரத்தில் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். வரும் 27-ம் தேதி கரூர் துயரத்தில் பலியான மக்களை சந்தித்த பிறகு கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ப்ளாக்பெர்ரி என்றும் அழைக்கப்படும் நாவல் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. நாவல் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதில், 5 சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த நன்மைகள் ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.