India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

<<18100854>>ஆஸி., மகளிர்<<>> கிரிக்கெட் அணியினரிடம் அத்துமீறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என BCCI கண்டித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. மகளிர் ODI WC-யில் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸி., அணியினர் ம.பி. ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதில் 2 வீராங்கனைகள் காஃபி குடிக்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மருது பாண்டியர், தேவர் குருபூஜையையொட்டி அக்.27, 30-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சிவகங்கை கலெக்டர் பொற்கொடி அறிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகள் இயங்காது. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி அக்.27-ல் <<18094912>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாம் சுவாசிக்கும் 50% ஆக்சிஜன் கடலில் இருந்து கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடலில் உள்ள பிளாங்க்டன் எனப்படும் சிறிய தாவரங்கள், சைனோபாக்டீரியா, ஆல்கி மற்றும் சில பாக்டீரியாக்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதைதான் கடலில் வாழும் உயிரினங்களும் சுவாசிக்கின்றன. நிறைய பேர் மரத்திலிருந்து மட்டுமே ஆக்சிஜன் கிடைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறனர். அனைவரும் இத்தகவலை தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இதற்கு TN அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து மதுபாட்டில் விற்ற அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை என்றும் விமர்சித்தார்.

*ஆசிய யூத் கேம்ஸ் கபடியில், தங்கம் வென்ற ஆடவர், மகளிர் அணியினருக்கு தலா ₹2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு. *இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தேவிகா சிஹாக் முன்னேற்றம். *பிறப்பு சான்றிதழ் மோசடி காரணமாக மல்யுத்த வீரர் சஞ்சீவை இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது. * நட்புறவு கால்பந்தில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது.

கரூர் துயரத்தால் தவெகவின் செயல்பாடுகள் முற்றிலுமாக தேக்கமடைந்துள்ளன. விஜய் மீண்டும் எப்போது களத்திற்கு வருவார் என ஆவலுடன் எதிர்நோக்கும் தவெகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நவ., முதல் வாரத்தில் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். வரும் 27-ம் தேதி கரூர் துயரத்தில் பலியான மக்களை சந்தித்த பிறகு கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ப்ளாக்பெர்ரி என்றும் அழைக்கப்படும் நாவல் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. நாவல் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதில், 5 சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த நன்மைகள் ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

ஒருபக்கம் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்டா பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நகர்வில், TN நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட வரலாற்றில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 11.5 சரக்கு ரயில்கள் நிறைய நெல் மூட்டைகள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என தெரிந்தும் திருமாவளவன், வைகோ ஆகியோர் ஏன் இன்னும் கேட்கவில்லை என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது கூட்டணிக்காகவா, ஓட்டுக்காகவா (அ) தேர்தலுக்காகவா என்றும் அவர் கேட்டுள்ளார். சாதியால் வந்த வேற்றுமைகளை சினிமா பார்த்து போக்கிவிட முடியுமா என்று ’பைசன்’ படத்தை திருமா பாராட்டியதையும் மறைமுகமாக குறிப்பிட்டார்.

பல்வேறு வகையான முதலீடுகளுக்கு நடுவில், Fixed Deposit (FD) மக்களிடம் நல்ல வரவேற்பில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் 10 ஆண்டுகள் வரை FD-ல் முதலீடு செய்யலாம்.
*Suryoday Small Finance Bank – 5 ஆண்டிற்கு 5.20%
*ஜன சிறு நிதி வங்கி – 5 ஆண்டிற்கு 8%
*ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் – 18 மாதத்திற்கு 7.75%
*பந்தன் வங்கி – 2 – 3 ஆண்டிற்கு 7.20%
*ICICI, HDFC வங்கிகள் – 5 ஆண்டிற்கு 6.60%
Sorry, no posts matched your criteria.