India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய இளைஞர்கள் மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கியுள்ளனர் என்று ரஜினி வேதனையுடன் தெரிவித்துள்ளார். செல்போன் யுகத்தில் இளைஞர்களுக்கு பாரத நாட்டின் கலாசாரம் தெரியவில்லை. வெளிநாட்டினரே மேற்கத்திய கலாசாரம் வேண்டாம் என்று இந்திய கலாசாரம் நோக்கி வருகின்றனர் எனக் கூறிய அவர், உண்மையான நிம்மதி, சந்தோஷம் கிடைக்கும் நம் நாட்டின் கலாசாரம் இளைஞர்களிடம் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 10.25% சர்க்கரை சத்து உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ₹355 ஆகவும் (டன்னுக்கு ₹3,550), 9.5% சர்க்கரை சத்து உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை ₹329.05 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு 0.1% சர்க்கரை சத்து கூடுதலாக உள்ள கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ₹3.46 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவல் குழுத் தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பக்தர்கள், பொதுமக்களின் ஆட்சேபனையை மீறி அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டி.எஸ்.சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நியமனத்தை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் எப்போதும் எதிராகவே நின்றிருக்கிறது என்று குற்றம்சாட்டினார். எனினும், ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் கருதி அதனை நடத்த அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.
மே 4-ம் தேதி நடக்கும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. <
லவ் மேரேஜ், அரேன்ஜ் மேரேஜ் எல்லாம் பழசு, இப்போ ‘Friendship Marriage’ தான் புதுசு என்பதைப் போல் சீனாவில் புதிய பழக்கம் டிரெண்டாகியுள்ளது. இந்த வகை மேரேஜை செய்யும் ஜோடிகள் திருமணம் மட்டுமே செய்யுமாம். படுக்கையையோ, படுக்கை அறையையோ பகிர மாட்டார்களாம். கல்யாணம் எப்போ என கேட்கும் உறவினர்களிடம் இருந்து தப்பிக்க காதல் இல்லாத இந்த வகை கல்யாணத்தை பலரும் விரும்புகின்றனராம். உங்கள் கருத்து என்ன?
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ஜூன் 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. பாக்., மீது முழுப் போர் தொடுத்தால், காஷ்மீர் உலகம் முழுதும் பேசுபொருளாகும். ஆனால், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க இந்தியா விரும்பாது. மேலும், இன்றைய சூழலில் முழு போர், இரு நாடுகளையும் பாதிக்கும். இரண்டுமே அணுஆயுத நாடுகளாக இருப்பதால், போர், ஒட்டுமொத்த உலகத்துக்குமே ஆபத்தாகும்.
இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.