India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புயல் உருவாவதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மருந்து பொருள்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாரசிட்டமால், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் தொடரை வென்றாலும் இந்தியாதான் உலகின் நம்பர் 1 அணி என ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், கோலியும் கடந்த 10 ஆண்டுகளாக எதிர் அணிகளை எவ்வாறு வீழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்திய அணியின் செயல்பாடுகளில் இருந்து எங்களுடைய இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

LIC-யால் பலனடைவது பாலிசிதாரர்கள் இல்லை, மோடியின் நண்பர்களே என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அதானி குழுமத்தில் <<18102060>>LIC<<>> ₹33,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மோடியின் நண்பரின் பாக்கெட்டை நிரப்ப, 30 கோடி பாலிசிதாரர்களின் பணத்தை சுரண்டுவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட் பழம்பெரும் <<18101845>>நடிகர் சதிஷ் ஷா<<>>(74) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொழுதுபோக்கின் உண்மையான ஜாம்பவானாக சதிஷ் ஷா என்றும் நினைக்கூரப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நகைச்சுவையால் எண்ணற்ற மக்களை சிரிக்க வைத்தவர் என புகழாரம் சூட்டிய மோடி, அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP

ரோஹித் – கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தால், இந்தியாவை அசைக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. இதுதானே சராசரி இந்திய ரசிகர்களுக்கு வேண்டியது. நீண்டநாள்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக விளையாடி, தனித்தனியாக வென்றுள்ளனர். ஓய்வு குறித்த தகவல் வெளியாகும் நேரத்தில் ரோஹித் சதமும், கோலி அரைசதமும் விளாசியுள்ளனர். தங்களுக்குள் இன்னும் ஃபயர்
இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். இதிலிருந்து அவர்களை பாதுகாக்க இந்த சிம்பிள் வழிகளை செய்யுங்கள் போதும். ➤தண்ணீர் தேங்கும் காலி கப்கள், டயர்கள், காலி பாட்டில்களை அப்புறப்படுத்துங்கள் ➤குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவியுங்கள் ➤ஜன்னல்களில் கொசு வலை போடுங்கள் ➤சத்தான, சூடான உணவுகளை கொடுங்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

‘சோழ தேசம் நோக்கி பிரயாணிக்க உள்ளோம்’ என்ற வசனத்திற்கு ஏற்ப வரும் பின்னணி இசையில், இன்றும் நாம் Goosebumps ஆகிறோம். ‘காந்தாரா: சாப்டர்1’ ரிலீஸானபோதும், எங்களிடம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளது என்று தமிழ் ரசிகர்கள் மார்தட்டினர். இப்போது இப்படத்தை கொண்டாடுவதில் எந்த பயனும் இல்லை என்று செல்வராகவன் வேதனைப்பட்டுள்ளார். இப்படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார்.

*குடல் பையில் இருந்து சிறுகுடல், பெருங்குடலை வெளியில் எடுங்கள்.
*குடலினுள் ஒரு குச்சியை நுழைத்தோ (அ) கைவிரலை நுழைத்தோ, குடலின் உள்புறத்தை வெளியில் எடுங்கள்.
*நன்றாக குடலை அழுத்தி கழிவை வெளியேற்றிவிடுங்கள்.
*பச்சை தண்ணீரில் 3-5 முறை கழுவுங்கள்.
*சூடான நீரில் சிறிது உப்புக்கல்லை போட்டு 5 முறை கழுவுங்கள். *குடலை கழுவ 35-55 நிமிடங்களாவது எடுத்தால், சாப்பிடும்போது மணம் நன்றாக இருக்கும். Share it

ஆசிய கபடி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்த துணை கேப்டனும், கண்ணகி நகரைச் சேர்ந்தவருமான கார்த்திகாவிற்கு, அரசு பணியோடு கூடிய பரிசுத்தொகை வழங்க வேண்டும் என பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். மேலும், கண்ணகி நகரில் அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட கபடி மைதானத்தை ஏற்படுத்தி தர வேண்டும். தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா பல்வேறு வகையான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வனவிலங்குகளுக்கு தாயகமாகும். பூமியில் வேறு எங்கும் காணப்படாத வனவிலங்குகள் இந்தியாவில் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த வனவிலங்கு ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.