India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மழைகாலம் வந்தால் சளியும் இருமலும் நாம் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி மீளலாம். முதலில் வெதுவெதுப்பான நீரில் துளசியை போட்டு வாய் கொப்பளித்து, சிறிய துண்டு இஞ்சியில் உப்பு தடவி சில நிமிடங்களுக்கு நன்கு மென்று சாற்றை விழுங்குங்கள் போதும். அவ்வளவு தான் நல்ல பலன் கிடைக்கும், வந்த வலி பஞ்சாக பறக்கும்.

சென்னையில் பேனா மை கொட்டியதற்காக 5-ம் வகுப்பு சிறுமியை தலைமை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை ஆசிரியன் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். திமுக வட்டச்செயலாளரின் தலையிட்டால் போலீஸ் தலையிடவில்லையா என கேள்வி எழுப்பிய அவர், இது திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு எனவும் விமர்சித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 ₹800 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே இப்படத்தின் OTT உரிமத்தை அமேசான் ப்ரைம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்மாத இறுதியில் தென்னிந்திய மொழிகளில் படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளதாம். திரையரங்கு விதிகளின் காரணமாக இந்தியில் மட்டும் நவம்பர் மாதம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. OTT காந்தாரா பாக்க ரெடியா?

*1947 – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த நாள்
*1950 – கொல்கத்தாவில் முதல் தொண்டு நிறுவனத்தை அன்னை தெரசா தொடங்கினார்
*1965 – பாடகர் மனோ பிறந்த நாள்
*1985 – நடிகை அசின் பிறந்த நாள்
*1999 – SC ஆயுள் தண்டனைக்கான காலத்தை 14 ஆண்டுகளாக நிர்ணயித்தது
*2015 – ஆப்கானித்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 398 பேர் பலி

சத்தான உணவு குழந்தைகளின் ஞாபக சக்தி, சிந்தனை மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்கும். அதற்கு முக்கியமான சில இதோ: * முட்டை – மூளைக்குத் தேவையான புரதம் உள்ளது *தானியங்கள் (கோதுமை,ராகி, ஓட்ஸ்) – நிலையான சக்திக்கு அடித்தளம் *கடலை மற்றும் பச்சை பயறு – புரதச்சத்து மிகுந்த உணவுகள் *வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் – மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் *சுரைக்காய், பீட்ரூட் – மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

*ராஞ்சியில் தீப்பிடித்து எரிந்த பஸ்ஸில் இருந்து பத்திரமாக தப்பிய 40 பயணிகள் *திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் பக்தர்கள் கடும் அவதி *நாக்பூரில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் *மகாராஷ்டிராவில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் இரட்டை குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை

*நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமுடியாது. *இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை. *நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது. *உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.

‘பைசன்’ போன்ற படங்களின் சமூகத்தில் பிரச்னை உண்டு பண்ண நினைக்கிறீங்களா என மாரிசெல்வராஜை பார்த்து கேட்பது அபத்தமானது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். கண்ணுக்குத் தெரியாத சாமி, இல்லாத பேய் படங்களை எடுக்கும்போது, கண்ணுக்கு தெரியிற சாதியக் கொடுமையைப் பற்றி பேசுறது தப்புனு எப்படி கேள்வி கேக்குறீங்க என நிகழ்ச்சி ஒன்றில் அவர் கேட்டுள்ளார்.

தனியார் பல்கலை. திருத்த சட்ட முன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். புதிதாக தனியார் பல்கலைக்கழங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டு என்ற நோக்கத்திற்காக இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் நலன் எந்த வகையில் இதனால் பாதிக்காது எனவும் விளக்கியுள்ளார்.

கமலா ஹாரிஸ் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபராக இருப்பார் என தெரிவித்த அவர், அது தானாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். 2028 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் தான் பின்தங்கியிருப்பதாகக் கூறும் கருத்துக் கணிப்புகளை பற்றி கவலையில்லை எனவும் குறிப்பிடுள்ளார்.
Sorry, no posts matched your criteria.