India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரில் CSK அணி மோசமாக தோல்வி அடைந்த முதல் 3 போட்டிகளும் MI அணியுடன்தான். 2020-ல் CSK-வை 10 விக்கெட் வித்தியாசத்தில் MI அணி வீழ்த்தியுள்ளது. 2008, 2025 (நேற்று) போட்டிகளில் 9 விக்கெட் வித்தியாசத்தில் MI அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், கடைசியாக இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் CSK அணி 6 முறை வாகை சூடியுள்ளது.
மகப்பேறு கால உயிரிழப்புகள் ஆண்டுக்கு 45லிருந்து 39ஆக குறைந்ததாக TN பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய 47 நாள்களுக்குள், பெண்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக, கர்ப்பிணி தொடர் கண்காணிப்பு, பிரசவத்திற்கான மருத்துவமனையை முன் கூட்டியே திட்டமிடல் போன்றவற்றால் கர்ப்ப கால உயிரிழப்பு குறைந்துள்ளது.
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகை உற்பத்தி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பைக்கு அடுத்தப்படியாக நகை உற்பத்தியில் ஜொலிக்கும் கோவை நகரில் சுமார் 1,00,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நகைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள் தற்போது தங்க நகைக்கு பதிலாக சில்வர், ஐம்பொன், கவரிங் நகைகளின் ஆர்டர்களே அதிகம் வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். எனவே, மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும் என்று விளக்கியுள்ளதன் மூலம் புதியவர்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
ஜம்மு – காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை விடாமல் பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் CSK, SRH அணிகள் மோதும் போட்டி ஏப். 25-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது போட்டி இதுவாகும். இதிலாவது CSK வெல்லுமா?
பல்கலை.களின் வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்கிறார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. உதகையில் ஏப். 25, 26-ல் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கவர்னரை கண்டித்த உச்சநீதிமன்றம், முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திருமாவளவன் கூறிய நிலையில், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது, TN அரசின் காலி பணியிடங்களை நிரப்பவும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றவும் திருமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அவர் அழுத்தம் கொடுப்பதில் அரசியல் கணக்கு இருக்குமா?
Sorry, no posts matched your criteria.