News May 7, 2025

ATM-களில் நாளை முதல் அதிரடி மாற்றம்: RBI-யின் புதிய விதி!

image

நாளை(மே 1) முதல், ATM-ல் மாத இலவசப் பரிவர்த்தனை வரம்பை மீறி பணம் எடுத்தால், ₹23 கட்டணமாக வசூலிக்கப்படும். மாற்றப்பட்டுள்ள விதிகளின்படி ➣ஒவ்வொரு மாதமும் சொந்த வங்கி ATM-ல் 5 முறை வரை கட்டணம் வசூலிக்கப்படாது ➣மெட்ரோ நகரங்களின் பிற வங்கி ATM-ல் 3 முறை வரை கட்டணம் வசூலிக்கப்படாது ➣மெட்ரோ அல்லாத நகரங்களில் மற்ற வங்கி ATM-ல் 5 முறை வரை கட்டணம் வசூலிக்கப்படாது. இது குறித்து என்ன நினைக்கிறீங்க?

News May 7, 2025

இந்தியாவின் தங்கமகன் சன்னி தாமஸ் காலமானார்!

image

இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ்(85) மாரடைப்பால் காலமானார். இவரின் தலைமையில் இந்திய அணி, 108 தங்கம், 74 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்களை பல்வேறு தொடர்களில் வென்றுள்ளது. இதில் 3 ஒலிம்பிக் பதக்கங்களும் அடங்கும். இவருக்கு 2001-ம் ஆண்டில் இந்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கி கெளரவித்தது. #RIP

News May 7, 2025

நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு.. நெட்டிசன்கள் கடுப்பு!

image

பஹல்காம் தாக்குதல் பரபரப்புக்கு இடையே பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. PM மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதில் அதுகுறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாததால் நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

News May 7, 2025

ராஜினாமாவுக்கு பின் மீண்டும் ஆக்டிவ்வான செந்தில் பாலாஜி

image

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை <<16244062>>ராஜினாமா <<>>செய்வதற்கு முன் கடைசியாக 27-ம் தேதி திமுக நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்திருந்தார். ராஜினாமா செய்தபிறகு அமைதியாக இருந்த அவர், தற்போது மீண்டும் ஆக்டிவ்வாக மாறியிருக்கிறார். கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூரை சேர்ந்த முதியவர், பேரன், பேத்தி உயிரிழந்தனர். அவரின் குடும்பத்தினருக்கு செந்தில் பாலாஜி X பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

சென்னை ‘மெட்ரோ 2’ திட்டம்: நிதி ஒதுக்க ஒப்புதல்!

image

சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டம் 118.9 கி.மீ கொண்டதாகும். ₹63,246 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் 3 பாதைகளை உள்ளடக்கியது. மாதவரம் – சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மற்றும் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை பணிகள் நடைபெற்று வருகிறது.

News May 7, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பு… முதல் ஆளாக இபிஎஸ் பாராட்டு

image

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதற்கு முதல் ஆளாக இபிஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை வரவேற்பதாக அவர் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கணக்கெடுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக அதை கைவிட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

News May 7, 2025

பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தலாம்: SC

image

தேச நலனுக்காக பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தி உளவுபார்ப்பதில் தவறில்லை என SC அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியினரின் போன் கால்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக 2021-ல் புகார் எழுந்தது. இந்நிலையில், அரசு உளவு சாஃப்ட்வேர் பயன்படுத்தினால் என்ன தவறு? தேச விரோதிகளை உளவுபார்த்தால் தவறில்லை என SC தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளதால் பெகாசஸ் அறிக்கையை பொதுவில் வெளியிட முடியாதென கூறியுள்ளது.

News May 7, 2025

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்று கமெண்ட்டில் சொல்லுங்க.

News May 7, 2025

இந்திய அணியில் இடம் பிடிக்கும் சாய் சுதர்ஷன்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் GT வீரர் சாய் சுதர்ஷன், இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர், ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதற்கான அணியில், சர்ஃபராஸ் கான், ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார்கள் என்றும் சாய் சுதர்ஷன், கருண் நாயர் இடம் பிடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

News May 7, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பின் நன்மைகள்

image

* புள்ளி விவரங்களின் அடிப்படையில் சமூக நீதி பரவலாக்கப்படும் * யாருக்கு எந்த திட்டங்கள் தேவை என்பதை துல்லியமாக அறிய முடியும் * சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் நலத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வழி பிறக்கும் * நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். * ஜாதிய உட்பிரிவுகளை வரைமுறைப்படுத்த புள்ளிவிவரங்கள் சாதகமாக அமையும்.

error: Content is protected !!