India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் 28 – ஏப்.14 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், SSLC விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் சற்றுமுன் தொடங்கியுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பணி நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு சவரன் ₹72,000-ஐ கடந்துள்ளது. இன்று (ஏப்.21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹9,015-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹111க்கும் விற்பனையாகிறது.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க TN அரசு டெண்டர் கோரியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என 2024 பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ₹34 கோடி செலவில், மினி டைடல் பூங்கா அமையவுள்ளது. ஓராண்டில் கட்டி முடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ என்றாலே ட்ரெண்டிங் தான். அவரின் கலகலப்பு பேச்சு மட்டுமல்ல, ஒவ்வொரு நடவடிக்கையையும் அப்படிதான் இருக்கும். இந்நிலையில், நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா போன்ற மூத்த தலைவர்களுடன் 2026 தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை செய்தபின், செல்ஃபி எடுத்துக்கொண்டார். தற்போது இணையத்தை கலக்குவது இந்த புகைப்படம்தான். போட்டோ எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க.
பொருளாதார சரிவுகளின் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.<<16156072>> ஒரே வாரத்தில் ₹11,986<<>> கோடிக்கு இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வாங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3% – 0.5% வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2% – 0.3% குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் 5ஜி வேகத்தில் இணையதள நெட்வொர்க் வழங்கும் பணிகள் இன்று வரை முழுமையாக முடியவில்லை. ஆனால், அண்டை நாடான சீனா அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. சீனாவின் யூனிகாம் நிறுவனத்துடன் கைகோர்த்து, ஹுவாய் நிறுவனம் முதல் முறையாக 10ஜி நெட்வொர்க் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டெக்னாலஜி மையமாக திகழும் ஹெபெய் மாகாணத்தில் இந்த வசதி அமலாகியுள்ளது. 9834 Mbps வேகத்தில் நெட்வொர்க் இருக்குமாம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று CM ஸ்டாலின் மீண்டும் முழங்கியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் தான். கருணாநிதி ஆட்சியின்போது இருந்ததைவிட, தற்போது மோசமான சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என வேதனை தெரிவித்த அவர், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் தெளிவான முயற்சிகளுக்காக மத்திய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக குற்றம் குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் KKR Vs GT அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் KKR-க்கு இப்போட்டி மிக முக்கியமானது. சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறவிருப்பதால், அந்த அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் GT வலுவாக இருப்பதால், இன்றைய போட்டி பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம் என்று TNSTC அறிவித்துள்ளது. ஊழியர்கள் சிலர் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும்; இதை கணக்கிட்டு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என கூறியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) உயர்வுக்கான அரியர் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மே மாதம் வழங்கப்பட உள்ள சம்பளத்தில் இந்த அரியர் பணம் கிடைக்கும். உதாரணமாக உங்கள் அடிப்படை ஊதியம் ₹35,400 எனில் 4 மாதங்கள்(ஜன. – ஏப்.) 4% நிலுவைத் தொகை ₹5,664 உங்களுக்கு கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 9.59 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் இதன் மூலம் பலனடைவார்கள்.
Sorry, no posts matched your criteria.