India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ODI-யில் ஃபீல்டிங்கின் போது காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, அவர் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், அவர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-யில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்ல வேண்டும் என்ற ஸ்டாலின் ஆணையை நிறைவேற்ற திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அடித்தளம் போடும் வகையில் மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

தென்காசியில் CM நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், TN அரசின் தகவல் சரிபார்ப்பகம் இது தவறான செய்தி என்று தெரிவித்துள்ளது. 2 தனிநபர்கள் தங்களின் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனைகளை, உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரசாணை 238-ன் படி, ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில் 40 பனைகளை வளர்க்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

TN அரசின் <<17712443>>’அன்புக்கரங்கள்’<<>> திட்டம் போல் மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ திட்டம் உள்ளது. இதன் மூலம் தாய் (அ) தந்தை (அ) இருவரும் இல்லாத 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் அடிப்படை தேவைகள், கல்விக்காக மாதந்தோறும் ₹4,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.missionvatsalya.wcd.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் Montha புயலாக மாறும் என்று IMD கணித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 790 கிமீ தொலைவில் புயல் சின்னம் இருக்கிறது. மேலும், 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னம், திடீர் திருப்பமாக 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர தொடங்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய், அதிமுக கூட்டணிக்குள் வந்தால், பாஜகவை இபிஎஸ் கழட்டிவிட்டு விடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், புதிய நண்பனுக்காக (TVK), பழைய நண்பனை (BJP) கைவிடும் பழக்கம் அதிமுகவுக்கு இல்லை என செம்மலை தெரிவித்துள்ளார். மேலும், பேரவை தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் எனக் கூறிய அவர், திமுகவுக்கு எதிரான கட்சிகள் கூட்டணிக்கு வர அழைப்பும் விடுத்துள்ளார்.

‘பாதுகாப்பான வங்கி- அடையாளம், நேர்மை, சமவாய்ப்பு’ என்ற கருப்பொருளில் கீழ் RBI ‘HaRBInger 2025’ ஹேக்கத்தான் போட்டியை அறிவித்துள்ளது. Tokenised KYC, Offline CBDC (Digital Currency), enhancing trust போன்றவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ₹40 லட்சமும், 2-வது பரிசாக ₹20 லட்சமும் வழங்கப்படும். யாரு இந்த போட்டிக்கு ரெடி?

பெரும்பான்மையான வீடுகளில் பசுமைக்காகவும், அழகுக்காகவும் செடி, கொடிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் இன்று இருக்கும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது மழைக்காலம் வேறு வந்துவிட்டது. எனவே வீடுகளில் மூலிகைகளை வளர்ப்பது மிக முக்கியம். அவை என்னென்ன என்பதை மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…

நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹4 உயர்ந்து ₹101-க்கு விற்பனையாகிறது. முட்டைக்கோழி கிலோ ₹110-க்கும், ஒரு முட்டை ₹5.25-க்கும் விற்பனையாகிறது. புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் சிக்கன் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனையில் சென்னையில் கிலோ ₹200 – ₹230 வரையில் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?

மெஸ்ஸியின் இந்திய வருகையும், கேரளாவில் அவர் விளையாடவிருந்த போட்டியும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA-விடம் கேரள போட்டிக்கு அனுமதி பெற தாமதமானதால் அப்போட்டி அடுத்த சர்வதேச அட்டவணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.