India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்க நகைகளை போலவே, இனி வெள்ளி நகைகளை வைத்தும் கடன் பெற RBI ஒப்புதல் அளித்துள்ளது. இது 2026 ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 kg வெள்ளியை அடகு வைக்கலாம். அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வெள்ளியை அடகு வைத்து கடனாக பெறலாம். ₹1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளுக்கு ₹85 ஆயிரம் வரை கடன் கிடைக்கும். தங்கத்திற்கு இணையாக பலரும் வெள்ளி வாங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த செப்.22-ல் தொடங்கிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பை 15 லட்சம் பேர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Infosys நாராயண மூர்த்தி-சுதா தம்பதியும், இந்த கணக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், CM சித்தராமையா சாடியிருந்தார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6.80 கோடி பேரில், இதுவரை 6.10 கோடி பேர் தகவல் அளித்துள்ளனர்.

ரோஹித் சர்மா நடப்பு ஆஸி., தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில், ரோஹித்தின் எதிர்காலம் குறித்து அவருடைய சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் 2027 WC-ல் விளையாட எண்ணுவதாகவும், அதற்கு பின்பே ஓய்வை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னம்பிக்கையால் மட்டுமே ரோஹித் சர்மா இதுவரை கிரிக்கெட்டில் தொடர்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் நாளை உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த ‘மொன்தா’ முன்கூட்டியே இன்று மாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. மேலும், இது நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று அன்றே மாலை அல்லது இரவு ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூரில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆய்வு ஒன்றில் இந்த பாதிப்பு 26% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக TN-ல் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக, அமைச்சர் மா.சு., அறிவித்துள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய், பிஹார் தேர்தல் நிலவரத்தை கூர்ந்து கவனிக்கிறாராம். குறிப்பாக, முதல்முறையாக களத்தில் குதித்திருக்கும் PK-வின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு, முகவர்களை நியமித்த விதம், வேட்பாளர்கள் சிலர் வாபஸ் பெற்ற பின்னணி போன்றவற்றை கூர்மையாக கவனிக்கிறாராம். தமிழகத்தில் தவெக தனித்து நிற்பது உறுதியானால் எத்தகைய சிக்கல்கள் உருவாகும் என்பதை இதன்மூலம் அவர் தெரிந்துகொள்ள விரும்புவதாக கூறுகின்றனர்.

➤<

IT, டெக் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 2025 மோசமான ஆண்டாக மாறியுள்ளது. காரணம் Layoff. அமேசான், கூகுள் என முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. Layoff.fyi தளம், உலகம் முழுவதும் 212 நிறுவனங்கள் 91,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், பல நிறுவனங்கள் முழு எண்ணிக்கையை கூறாததால், இது 1 லட்சத்தையும் தாண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

2021-ல் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை பாஜக கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், கொங்கு மண்டலத்தில் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பளித்தது அதிமுக. ஆனால், இம்முறை விடக்கூடாது என சேலத்தில் டெல்லி தலைவர்களை வைத்து கூட்டங்களை நடத்த பாஜக ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், சேலத்தை தனது கோட்டையாக கருதும் EPS கடுப்பில் இருக்கிறாராம். பாஜகவுக்கு சேலத்தில் EPS வாய்ப்பளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்னூல் அருகே கடந்த 23-ம் தேதி விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்ஸில் 20 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பஸ்ஸில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. போனில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து சிதறியதும் நெருப்பு வேகமாக பரவ ஒரு காரணம். மக்கள் பயணிக்கும் ஆம்னி பஸ்களை பார்சல் லாரிகள் போல பலர் பயன்படுத்துவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு இதில் கவனம் செலுத்துமா?
Sorry, no posts matched your criteria.